tamilnadu

வாக்கி டாக்கி கோபுரம் சேதத்தை தவிர்க்க இடிதாங்கி அமைப்பு

திருவில்லிபுத்தூர் ஜூன் 11- திருவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை உச்சி பகுதியில் பேய் மலை மொட்டைப்பகுதி உள்ளது. இங்கு வனத்துறையினர் வாக்கிடாக்கி பயன் பாட்டிற்காக கடந்த ஜனவரி மாதம் சுமார் ரூ.10 லட்சம் செலவில் வாக்கி டாக்கி டவர் அமைக்கப்பட்டது இந்த இடத்தில் கடந்த மாதம் பலத்த மழை பெய்த போது வாக்கி கோபுரம் அமைந்துள்ள இடத்தின் அருகே மின்னல் தாக்கியது.  இதையடுத்து டவர் அமைக்கப் பட்ட இடத்தில் தீப்பிடித்தது.இதைய டுத்து இடி, மின்னலில் வாக்கி டாக்கி கோபுரம் சேதமடையாமலிருக்க தற்போது இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது.