tamilnadu

சுடுகாட்டுக்கு பாதை இல்லை: அவதிப்படும் ஆதிதிராவிட மக்கள்

விழுப்புரம், ஜூலை 16- விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட மடவிளாகம் கிரா மத்தில் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த 750க்கும்  மேற்பட்டோர் வசிக்கின்ற னர். இந்த பகுதி மக்களுக்கு சுடுகாடு இருந்தும் பல  ஆண்டுகளாக பாதை  இல்லாததால் இறந்தவர்க ளின் உடலை 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுடு காட்டிற்கு விளை நிலங்கள் வழியாக எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. மழை பெய்தால் இறந்த வர்கள் உடலை சேறும் சகதி யுமாக இருக்கும் விளை நிலங்களில்தான் எடுத்துச் செல்ல வேண்டும். இதுகுறித்து பலமுறை போராட்டங்கள் நடத்தியும், மனு அளித்தும் கூட சம் பந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் பாதை  அமைக்க எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதேபோல் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் சுடுகாடு மற்றும் பாதைகள் இல்லாமல் அவதிப்படும் ஆதிதிராவிட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சுடுகாடு மற்றும் பாதை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.