விழுப்புரம்.நவ.21- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றி யத்திற்குட்பட்டது முண்டி யம்பாக்கம் கிராமம். இங்கு கிராமத்திற்கு நடுவில் அர சினர் உயர்நிலைப் பள்ளி அதன் அருகில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கள் உள்ளன. இந்த பள்ளி களில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். இங்கு பள்ளி அருகே கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் ஒரு நீர்தேக்க தொட்டி இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து பயன்பாடுகள் இல்லாமல் இருந்தது. அதனை உடைத்து அப் புறப்படுத்தினர். அந்த இடத்தில் அரசு அறிவுறுத்தல் படி மழைநீர் சேகரிப்பு கட்ட வேண்டி சுமார் 5 அடி ஆழத்தில் பத்துக்கு பத்து என்ற நீள அகலத்தில் ஒரு பள்ளம் தோண்டப் பட்டுள்ளது. பள்ளம் தோண்டி பல நாட்கள் ஆகி யும் இதுவரை எந்தவித பயன்பாடுகளும் இன்றி அந்த பள்ளம் பள்ளி அருகே உள்ளது. தினந்தோறும் பள்ளிக்கு வரும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளத்தை எட்டி பார்ப்பதும் அதில் கல்லெடுத்து வீசி விளையாடி வருவதுமாக இருக்கின்றனர். அத னால் பருவமழை காலமாக இருப்பதால் மழை திடீர் திடீரென எப்பவேண்டு மானாலும் பெய்யும் என்ப தால் பள்ளத்தில் மழை நீர் தேங்கி பள்ளி மாண வர்களுக்கு ஆபத்தை ஏற்ப டுத்தும் முன்பு சம்மந்தப்பட்ட துறை உடனடியாக அந்த பள்ளத்தை மூடவேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலி யுறுத்தியுள்ளது.