விழுப்புரம், மார்ச் 2- விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது கரும்பு அறுவடை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் அருகே முண்டி யம் பாக்கம் ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் கரும்பு அபி விருத்தி மற்றும் ஆராய்ச்சித் துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில்,“ முண்டி யம்பாக்கம் சர்க்கரை ஆலை பகுதியில் தற்போது கரும்பு அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடைக்கு பிறகு கட்டை கரும்பு பராமரிப்பிற்கு விவசாயிகள் தயா ராகி வருகின்றனர். கட்டை கரும்பு சாகுபடி யில் நடவு கரும்பைப் போன்று அதிக மகசூல் எடுக்க கடை பிடிக்க வேண்டிய முறைகளில் மிக முக்கியமானது. பயிரில்லா இடைவெளியை முக்கியமாக நிரப்ப வேண்டும். கட்டை கரும்பு வயலில் பார் வரிசைகளில் இடைவெளி இல்லாமல் கரும்பு துளிர்கள் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பகுதியில் கரும்பு வய லில் அதிகமாக கிளைத்துள்ள கரும்பு துளிர்க ளின் ஒரு பகுதியை பிரித்தெடுத்து கரும்பு பயிர்களின் இலைகளின் மேல் பாதி இலை களை அறுத்த பின்னர் இடைவெளிகளை நிரப்ப வேண்டும். இல்லையெனில் கரும்பு நாற்றுக்களைக் கொண்டும் இடைவெளிகளை நிரப்பலாம். கரும்பு கரணைகள் மூலம் இடைவெளியை நிரப்பக் கூடாது.இவ்வாறு இடைவெளி நிரப்பும் போது வயலில் போதிய அளவு ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இடைவெளிகளை நிரப்பியவு டன் நீர் பாசனம் செய்வது மிகவும் முக்கியமா கும். இவ்வாறு தொழில் நுட்பத்தை பயன்ப டுத்தினால், அதிக மகசூல் பெற்று பயன டையலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.