tamilnadu

விடுமுறை தினத்திலும் வேலை வாங்கும் அஞ்சல்துறை கருப்பு பட்டையுடன் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், மே12- விருதுநகர் மாவட்டத் தலைமை அஞ்சல கத்தில் விடுமுறை தினத்திலும் கட்டாயப் பணி செய்ய நிர்பந்தம் செய்திடும் நிர்வா கத்தை கண்டித்து கருப்புப் பட்டையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  விருதுநகர் மாவட்ட அஞ்சல்துறையில் காலிப் பணியிடங்கள் ஏராளமாக உள்ளன. அதை நிரப்பிட மத்திய அரசு உரிய நடவ டிக்கை எடுப்பதில்லை. இதனால் குறை வான ஊழியர்களே கடிதங்களை உரிய முக வரியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்தநிலையில், ஒரே நாளில் 70 தொழிலாளர்களை இந்தியன் போஸ்டல் பேமண்ட் பேங்கில் சேர்க்க வேண்டும் என வங்கி நிர்வாகம் அஞ்சலக ஊழியர்களை நிர்பந்தம் செய்து வருகிறது.

மேலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட் டுள்ளது. மேலும், அஞ்சலகத்தில் தனி மனித இடைவெளியின்றி 100 சதவீத தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  எனவே, விடுமுறை தினங்களில் பணி செய்ய கட்டாயப்படுத்துதல் கூடாது. நாளொ ன்றுக்கு 70 பேரை போஸ்டல் வங்கியில் சேர்க்க நிர்பந்ததிக்க கூடாது என வலி யுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் சங்கத்தினர் கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  விருதுநகர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்தில் கோட்டச் செயலாளர்கள் சோலையப்பன், வரதராஜன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.