tamilnadu

img

உ. செல்லூரில் சிபிஎம் போராட்டம் வெற்றி குடிநீர் பைப் லைன் பொருத்திய அதிகாரிகள்

உளுந்தூர்பேட்டை, நவ.24 - திருநாவலூர் ஒன்றியம் உ.நெமிலி தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டும் பைப் லைன் அமைக்காமல் இருந்தது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உ.செல்லூர் கிளை சார்பில் செயல்படாத குடிநீர் தொட்டிக்கு மாலை அணிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் விளைவாக உடனடியாக பைப் லைன் அமைக்கும் பணி தொடங்கியது. உ.நிமிலி பேருந்து நிறுத்தத்திலி ருந்து உ.செல்லூர்வரை செல்லும் தார்ச்சாலையை புதுப்பிக்க வேண்டும், தலித் மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டுப் பாதையை சரி செய்ய வேண்டும், உளுந்தூர்பேட்டையில் இருந்து உ.செல்லூர் வரும் நகரப் பேருந்து தடம் எண் 35ஐ மாணவர்கள் நலன் கருதி தொடர்ந்து இயக்க வேண்டும், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் நிதியிலிருந்து கட்டப்பட்ட சமுதாயக்கூடத்திற்கு சுற்றுச் சுவர் அமைத்து பராமரித்திட வேண்டும், உ.நெமிலி ஊராட்சிக்குட்பட்ட  உ.நெமலி, உ.செல்லூர் மற்றும் தலித் பகுதியில் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தை தரமாகவும், லஞ்சம் இல்லா மலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செல்லூரில் சனிக்கிழமையன்று (நவ.23) நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் வி.சுரேஷ் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர் ஏ.வி.ஸ்டாலின்மணி, ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சீனுவாசன், ஜெயக்குமார், பொறியாளர் சரவணன் ஆகியோர் சிபிஎம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குழாய் இணைப்பு கொடுத்து தண்ணீர் கொண்டுவர பணிகளை துவக்கினர். மேலும் மற்ற கோரிக்கைகளை குறிப்பிட்ட காலத்தில் முடித்து தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.