tamilnadu

கோஷ்டி மோதல்

திருவில்லிபுத்தூர், மே 19- திருவில்லிபுத்தூர் அருகே துலுக்கன் குளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது குறுக்கே வந்த நாய் மீது வாகனம் ஏறியது தொடர்பாக இரண்டு தரப்பினர் திங்களன்று மோதிக் கொண்ட னர். இதில் சிலர் காயமடைந்தனர் இந்த மோதல் தொடர்பாக திருவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந் திரன் உத்தரவின் பேரில் காவல்துறை யினர் துலுக்கன்குளம் பகுதியில் குவிக் கப்பட்டுள்ளனர். இரண்டு தரப்பு மோதல் தொடர்பாக வன்னியம்பட்டி காவல்துறை யினர் ஒரு தரப்பை சேர்ந்த 16 பேர் மீதும் மற்றொரு தரப்பைச் சேர்டந்த ஐந்துபேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.