tamilnadu

img

பத்து நாளில் பாழாய் போன சாலை

திருவில்லிபுத்தூர், ஜூன் 29- திருவில்லிபுத்தூரில் புதிய தார்சாலை போட்டு  பத்து  நாட்கள் மட்டுமே ஆன நிலை யில் சாலையில் திடீரென  பள்ளம் ஏற்பட்டு விட்டது. அதிர்ச்சி. தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே மதுரை செல்லும் சாலையில்  புதிய தார்சாலை போடப்பட்டு  பத்து  நாட்களே ஆகிறது. இந்தநிலையில் திடீரென சாலை யில் பள்ளம்  ஏற்பட்டுள்ளது. பள்ளத்தை மூட வேண்டுமென வலியுறுத்தியுள்ள மக்கள் தரமற்ற  சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்கின்றனர்.