tamilnadu

img

விழுப்புரத்தில் மாயமான நபர் பிடிபட்டார்

விழுப்புரம், ஏப்.15- விழுப்புரம் அரசு சிறப்பு மருத்துவமனை யில் கடந்த 6 ஆம் தேதி கொரோனா அறிகுறி களுடன் 30 வயது தில்லி இளைஞர் ஒருவர்  அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், கொரோனா தொற்று இல்லை எனக் கூறி, அவர் கடந்த 7 ஆம் தேதி  வெளியே அனுப்பப்பட்டார். மறுநாள் அந்த  இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்ததை அடுத்து அவரைத் தேடி கண்டு பிடிக்க மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டார்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் 10 தனிப் படைகளை அமைத்து  விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி உள்ளிட்ட  பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், தில்லி இளைஞர் குறித்த விவரங்களை  தமிழ், ஆங்கிலம், `ஹிந்தி ஆகிய 3 மொழி களில் சுவரொட்டிகளாக அச்சிட்டு விழுப்பு ரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்க ளில் நெடுஞ்சாலையோரப் பகுதிகள், மக்கள்  கூடும் இடங்களில் திங்கள்கிழமை இரவு ஒட்டி தேடி வந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், படாளம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோர லாரி நிறுத்தும் இடத்தில் `ஹிந்தி மொழியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியை பார்த்த வெளி மாநில லாரி ஓட்டுநர் ஒருவர் அந்த தில்லி நபர் படாளத்தில் தங்கியிருப்பது குறித்து  அங்கிருந்த மற்றொரு லாரி ஓட்டுநரான திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள ஜமீன்சிங்கம் பட்டியைச் சேர்ந்த பூதபாண்டியிடம் (43) தெரிவித்தார்.  

இந்த தகவலை பூதபாண்டி விழுப்புரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே  விழுப்புரம் மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் ஜெயக்குமார் கூடுதல் எஸ்.பி. சர வணக்குமார் தலைமையிலான காவலர்கள் மருத்துவக் குழுவினருடன் படாளம் பகுதிக்கு  சென்று தில்லி இளைஞரை மீட்டனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 7ஆம் தேதி இரவே  விழுப்புரத்திலிருந்து லாரியில் சென்று படா ளம் லாரி நிறுத்துமிடத்தில் தங்கியிருந்தது டன், தில்லிக்கு செல்ல லாரி ஓட்டுநர்களிடம் உதவி கேட்டு வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த இளைஞரை கொரோனா சிகிச்சைக்காக 108 அவசரகால ஊர்தி மூலமாக  அழைத்து வந்து விழுப்புரம்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சேர்த்தனர். மேலும், தில்லி இளைஞரு டன் தங்கிருந்த லாரி ஓட்டுநரும் கொரோனா  பரிசோதனைக்காக அதே மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார்.. தில்லி இளைஞர் குறித்து தகவல் தெரி வித்த லாரி ஓட்டுநரான பூதபாண்டிக்கு, மாவட்ட காவல்துறை அறிவித்திருந்த ஆயி ரம் ரூபாய் வெகுமதியை காவல் கண்கா ணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.