tamilnadu

img

கொரோனாவால் இறப்போர் இறுதி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கிடுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கொரோனா தொற்றால் இறந்தவர்களை புதைப்பதால் அருகிலுள்ள பகுதிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை மருத்துவர்கள் திரும்பத்திரும்ப வலியுறுத்தி சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆயினும், மீண்டும் இத்தகைய நிகழ்வு தலைநகரிலேயே நடந்திருப்பது வேதனையில் ஆழ்த்துகிறது

சென்னை, ஏப்.20-  கொரோனா வைரஸ் நோயால் இறப் போரின் இறுதி நிகழ்ச்சிக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரி ழந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு தங்கள் பகுதியில் அனுமதிக்க முடியாதென சிலர் ஆட்சேபணை செய்தது இரண்டாவது முறையாக தமிழகத்தில் நடந்திருக்கிறது. நேற்றைய தினம் மரண மடைந்த நரம்பியல் மருத்துவர் சைமன் உடல் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டபோது, அந்த அடக்கத்திற் காக சென்றவர்கள் மீது தாக்குதலும் நடத்தப் பட்டிருக்கிறது. கொரோனாவால் மரணம டைந்தவரை தங்கள் பகுதியில் புதைப்ப தால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற தவ றான புரிதலால் சிலர் இதில் ஈடுபட்டிருக்கின் றனர்.

கொரோனா தொற்றால் இறந்தவர் களை புதைப்பதால் அருகிலுள்ள பகுதி களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என் பதை மருத்துவர்கள் திரும்பத்திரும்ப வலி யுறுத்தி சொல்லிக் கொண்டேயிருக்கிறார் கள். ஆயினும், மீண்டும் இத்தகைய நிகழ்வு தலைநகரிலேயே நடந்திருப்பது வேதனை யில் ஆழ்த்துகிறது. இந்த செயல்கள் வருத் தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதாகும். 

இந்த இக்கட்டான காலத்தில் மருத்துவர் களும், மருத்துவப் பணியாளர்களும் தங்கள் குடும்பங்களைப் பிரிந்து மிகக் கடு மையான சூழலில் பணியாற்றிக் கொண்டி ருக்கிறார்கள். அத்தகைய பணியில் ஈடு பட்டுக் கொண்டிருப்போருக்கு இந்த செய்தி கள் மிகக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். பொதுமக்கள் இத்தகைய நட வடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டிக் கொள்கிறது. இனியொரு நிகழ்வு இது போன்று நடக்காத வண்ணம் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் உண்டு.

மருத்துவர்களின் கடுமையான முயற்சி களையும் மீறி யாருக்கேனும், அவர் மருத்து வராக இருந்தாலும் சரி மற்றவராக இருந்தாலும் சரி இத்தகைய நிலை ஏற் பட்டால் காவல்துறையினரின் உரிய பாது காப்புடன் இறுதி நிகழ்ச்சி நடைபெறுவதை மாநில அரசு உத்தரவாதப்படுத்த வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.