tamilnadu

img

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள்

12 ஒன்றிய கவுன்சிலர், 17 ஊராட்சிமன்றத் தலைவர் இடங்களுக்குப் போட்டி

திருப்பூர், டிச. 19 – திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 12 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் 17 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன் வியாழக்கிழமை வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்தி ருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஒரு இடம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 12 இடங்கள் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு 17 இடங்கள் ஆகிய வற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன்படி திருப்பூர் மாவட்ட ஊராட்சி வார்டு எண் 14-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வெ.ரங்கநாதன் வேட்பாள ராகப் போட்டியிடுகிறார். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. இதில் எஸ்.சி. பெண்கள் 2 இடங்கள் உள்பட 4 பெண்கள் மற்றும் ஒரு எஸ்.சி., இடம் ஆகியவை அடங்கும். இது தவிர ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு, 17 ஊராட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். இதில் பெண்கள் 3 பேர், எஸ்.சி., 2 பேர், எஸ்.சி. பெண் கள் 3 பேர் உள்ளடங்கியுள்ளனர்.