சென்னை, டிச. 4- தென்மேற்கு வங்கக் கட லில் இலங்கை மற்றும் தென் தமிழகக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்ட லம் நிலை கொண்டுள்ள தால் தமிழகம் மற்றும் புதுச் சேரியில் வியாழனன்று (டிச. 4) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ கத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், திருவண்ணா மலை ஆகிய மாவட்டங்க ளில் கனமழை பெய்தது. இத னால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் கடந்த சில நாட்களாக மழை பெய் தது. புறநகர்ப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந் துள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் தென் தமி ழக கடல் பகுதியில் காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்ய வாய்ப் புள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ள தாகத் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறும்போது, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட் டங்களில் வருகிற 7,8 ஆம் தேதிகளில் கிழக்கு திசை நோக்கி காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.