49 மாவட்டங்களில் மட்டுமே 80% தொற்று!
இந்தியாவின் கொரோனா தொற்றுப் பாதிப்பில் 90 சதவிகிதம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, உ.பி., குஜராத் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் ஏற்பட்டுள்ளன. அதிலும் 80 சதவிகித தொற்றுக்கள் 49 மாவட்டங்களில் மட்டுமே பரவியுள்ளன. 80 சதவிகித உயிரிழப்பு 32 மாவட்டங்களில் மட்டும் நிகழ்ந்துள்ளன.
கொரோனா முகாமாகும் சின்னச்சாமி ஸ்டேடியம்!
பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையம் கொரோ னா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு அங்கு பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ள னர். இந்நிலையில் பிரபல பெங்களூரு சின்னச்சாமி கிரிக்கெட் மைதான மும் கொரோனா சிகிச்சை முகாமாக மாற்றப் படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
நிதியமைச்சக கட்டட மேற்கூரை இடிந்தது!
தில்லி வடக்கு பிளாக் பகுதியில், பிரதமர் அலு வலகம், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் அலுவலகங்கள் உள்ளன. மிகுந்த பாதுகாப்பு நிறைந்த பகுதியான இங்கு, நிதி அமைச்சக அலுவலகம் அமைந்து ள்ள கட்டடத்தின் 2-ஆவது மாடியின் மேற்கூரை வியாழனன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா சபாநாயகர் அலுவலகம் மூடல்!
ஆந்திர தலைமைச் செயலகத்தில் பணியாற் றும் 17 ஊழியர்களுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு, 4 துறைகளின் அலு வலகங்கள் மூடப்பட்டன. தற்போது சட்டமன்ற சபாநாயகர் தம்மிநேனி சீதாராம், அமைச்சர் தர்மான கிருஷ்ணா தாஸ் ஆகியோரின் அலுவலகங்களும் பூட்டப்பட்டுள்ளன.
கர்நாடக எம்பி, எம்எல்ஏ 5 பேருக்கு தொற்று!
கர்நாடகத்தில், மாண்டியா தொகுதி எம்.பி.யும், நடிகையுமான சுமலதா அம்பரீஷுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏ ரங்கநாத் (குனிகல்), பாஜக எம்எல்ஏ-க்கள் பாரத் ஷெட்டி (மங்களூரு வடக்கு), ராஜ்குமார் (கல்புர்கி) ஆகியோ ருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
மைசூரு அரண்மனை மூடப்பட்டது!
மைசூரு அரண்மனை யில், பணிபுரிந்து வரும் ஊழியரின் உறவினர் ஒரு வருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டதைத் தொடர்ந்து, மைசூர் அரண்மனை மூடப்பட்டுள்ளது. கிருமிநாசினி தெளிப்பு க்குப் பின் மீண்டும் திங்கட்கிழமை அரண் மனை திறக்கப்படும் என கூறப்படுகிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 14% சரிவு?
இந்தியாவின் முன் னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்ட ன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில், நிகர லாபத்தில் 13.81 சதவிகித சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் ரூ. 8,131 கோடி நிகர லாபம் ஈட்டிய டிசிஎஸ், தற்போது ரூ. 7,008 கோடி மட்டுமே லாபம் ஈட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
திருப்பதி கோயில் தரிசனம் ரத்தாகிறது?
திருப்பதி தேவஸ்தான பணியாளர்களில் இதுவரை 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து திருமலை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக வியாழனன்று பிற்பகல் அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒரு மணிநேரத்தில் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. எனினும் கோயில் செயல்பாடுகள் மீண்டும் நிறுத்தி வைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.