கொரோனா என்னும் கொடூ ரனால் நாடே ஊரடங்கிற்குள் முடங்கி யுள்ளது. இதனால் பலரது வாழ்வா தாரம் அடியோடு சரிந்துள்ளது. அத் தகைய நிலையில் எரியும் வீட்டில் பிடிங்கியவரை லாபம் என்ற சொற் றோடு ஏற்ப மற்றொரு கொடூரமாக அவதரித்துள்ளது மின் கட்டணம் வசூலிப்பு என்கிற அடாவடி. பல பிரபல நடிகர்களே இதைக் கண்டு மிரண்டு வரிசையாக தங்களது அதிர்ச்சியை வெளிகாட்டிக் கொண்டிருக்கையில் சாமானிய மக்களின் நிலையோ வழக்கம்போல் திண்டாட்டம் என்ப தில் சந்தேகமில்லை. மின்கட்டணம் செலுத்துவதில் தளர்வு, கால அவகா சம், பழைய கட்டணத்தையே செலுத்த லாம் என கொரோனா கொடூரத்தால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தவர்களை மயிலிறகால் வருடுவதைப்போல் வருடிவிட்டு தற்போது தனது சுய ரூபத்தை வெளிகாட்டியுள்ளது தமிழ அரசும், மின்வாரியமும்.
முன்னதாக, கொரோனா தொற்று காரணத்தால் மார்ச் மாதம் இறுதியில் துவங்கி ஜூன் மாதம் பாதி வரை வீடு களில் மின் கணக்கீடு செய்ய முடியாத நிலை மின் வாரியத்திற்கு ஏற்பட்டது. இதனால் மின் நுகர்வோர் முந்தைய மாதம் செலுத்திய கட்டணத்தை செலுத் தினால் போதும் என அறிவித்தது மின் வாரியம். இதனால், கடும் நெருக்கடிக் குள் தமிழக மக்கள் சிக்கி தவித்த போதும், தங்களின் வயிற்று பசியை யும் பொறுத்துக்கொண்டு இருக்கிற மிச்ச சொச்ச காசையும் மின் வாரியத் திற்கு செலுத்தி, பொறுப்புள்ள குடி மகனாக மக்கள் தங்களை நிருபித்த னர்.
ஆனால், தற்போது அதை யெல்லாம் புறங்கையால் தள்ளிவிட்டு நான்கு மாத கணக்கீட்டை ஒருசேர எடுத்துவிட்டு அதனடிப்படையில் கட் டணத்தை வசூலித்து வருகிறது. இதனால் மாதக் கணக்கீட்டின்படி கட்ட வேண்டிய தொகையை விட தற்போது இரு மடங்கு, மூன்று மடங்கு வரை மின்நுகர்வோர் அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக, மின் பயன்பாட்டு கூடுதல் அளவுக்கு ஏற்ப யூனிட்டுக்கு தொகையை நிர்ணயிக் கும் ஸ்லாப் சிஸ்டம் என்கிற அடுக்குக் கட்டண முறையால் மின் நுகர்வோர் நெருக்கடியில் சிக்க வைக்கப்பட்டுள்ள னர். இதனால், நிர்ணயிக்கப்பட்ட யூனிட் கட்டமைப்பைத் தாண்டி ஒரு யூனிட் அதிகம் பயன்படுத்தினால் கூட கட்டணம் பல மடங்காக உயரும். உதாரணத்திற்கு, 500 யூனிட்டுக்கான கட்டணம் ரூ.1330 இருக்கும் பட்சத்தில், 501 யூனிட் உபயோகித்தால் ரூ. 2127 செலுத்த வேண்டி வரும். ஆக, தற்போது கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமலும், வருமான மில்லாமலும் வீட்டிலேயே முடங்கி யுள்ள மக்கள், நோய் பரவும் அச் சத்தைத் தாண்டி இந்த மாத மின்சாரக் கட்டணத்தை எப்படிக் கட்டுவது என்ற அச்சத்திலேயே மிரண்டு போயுள் ளனர். இத்தகைய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சிலரின் குமுறல்கள் வருமாறு..
மக்களுக்காகத்தான் அரசே தவிர, மக்களிடம் பிடுங்குவதற்கு அல்ல
கோவை சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வரும் ராஜன் என்பவர் கூறுகை யில், அரசு தற்போதைய சூழ்நிலையில் மக்களுக்கு சலுகை தான் அளிக்க வேண்டுமே தவிர கழுத்தை நெறிக்கு மளவுக்கு நெருக்கடியில் தள்ளக் கூடாது. சொந்த வீடு வைத்திருந்தாலும் தற்போதைய மின் கட்டணத்தைப் பார்த்து உண்மையில் மிரண்டு தான் போயுள்ளேன். வழக்கமாக, அதிக பட்சம் 900 ரூபாய் வரை தான் செலுத் துவேன். ஆனால், தற்போது 5400 ரூபாய் வந்துள்ளது. எங்களைப் போன்றவர்களுக்கே இந்நிலை யெனில், வாடகை வீட்டில் இருப்பவர் கள் இன்னும் சிரமப்படுகின்றனர். அதுவும் தற்போதைய ஸ்லாப் சிஸ்டத் தின்படி 3 மாதத்திற்கும் சேர்த்து இவர்கள் கணக்கு போடும்போது, இரு மாதத்திற்கு 900 ரூபாய் வரை செலுத்தி வந்த நிலை மாறி, 3 மாதத்திற்கும் சேர்த்து கணக்கீட்டு 5400 வரை கட்டு கிறேன். முன்பு ஒரு யூனிட்டுக்கு 4 ரூபாய் வழக்கமாய் செலுத்திய நிலையில், ஒட்டு மொத்தமான கணக்கீட்டால் ஒவ் வொரு யூனிட்டுக்கும் தற்போது 6 ரூபாய் கட்டியுள்ளேன்.
மக்களுக்காகத்தான் அரசே தவிர, மக்களிடம் இருந்து பிடுங்குவதற்கு அரசை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. பொருளாதாரத்தை நிலைப்படுத்த அரசுக்கு ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால், இந்த கொரோனா காலத்தை உபயோகித்து இருப்பதையும் பிடுங்க அரசு இம்மாதிரி செயல்படுவது சரி யல்ல. மேலும், தற்போது சீனப் பொருட் களை புறக்கணிப்போம் என அறி வுறுத்தி சீன செயலிகள் சிலவற்றை அரசு முடக்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு சமயத்தில் சீன அரசு வீடு களுக்கே சென்று மக்களுக்கு தேவை யானவற்றை வழங்கிய படிப் பினையை மட்டும் இந்திய அரசு கற்க மறுப்பது வேடிக்கையாக உள்ளது. ஆக ஆக்கப்பூர்வமான திட்டம் தான் மக்களுக்கு அவசியமே தவிர, முட்டாள் தனமான திட்டங்கள் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
புரியாத ஸ்லாப் சிஸ்டம்
ராதிகா என்பவர் குறிப்பிடு கையில், எங்கள் வீட்டில் நான், என் கணவர் மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் என் மகன் வசித்து வருகிறோம். சாதாரணமாக நான் வீட்டில் மின்விசிறி கூட போட மாட்டேன். என் கணவர் மற்றும் மகன் மாலையில் வந்தால் மட்டும் அதனை உபயோகிப்பார்கள். வழக்கமாக நூறு ரூபாயை எங்கள் வீட்டு மின் கட்டணம் தாண்டாது. ஆனால் தற்போது நானூறு ரூபாய் வருகிறது. ஆரம்பத்தில் பழைய மின் கட்டணம் செலுத்த அரசு கால அவகாசம் வழங்கியபோது அது பய னளிப்பது போல் தெரிந்தது. ஆனால் தற்போது அனைத்தையும் சேர்த்துக் கட்டும் போது இது பெரும் சுமையாகத் தான் உள்ளது. தற்போதைய ஸ்லாப் சிஸ்டம் இன்னும் சரியாகப் புரியாத தால் வீட்டு உரிமையாளரிடம் வாதம் கொள்வதுதான் வாடிக்கையாகிறதே தவிர மின் கட்டணத்தை தள்ளிக் கட்டு வதால் எப்பயனும் எங்களுக்கு இல்லை. இவ்வாறு தன் கவலையைப் பகிர்கிறார் ராதிகா.
அர்த்தமில்லாத நிவாரணம்..
அரசு ஊழியர் ஒருவர் குறிப்பிடு கையில், வழக்கமாகக் கட்டும் கட்ட ணத்தை விட தற்போது இருமடங்கு அதிகம் கட்டியுள்ளோம். வாடகை வீடோ, சொந்த வீடோ யாராக இருந்தா லும் தற்போதைய கட்டண முறையால் அனைவரும் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் மின் கட்டணம் கட்ட அவகாசம் அளித் தது, குடும்ப அட்டைதார்களுக்கு நிவாரண தொகை அளித்தது ஆகி யவைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது உண்மை தான். ஆனால், தற்போது அதற்கும் சேர்த்து இருமடங்காக வசூலிப்பது அந்த நிவாரணத்திற்கே அர்த்த மில்லாமல் போய்விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
மாதந்தோறும் கணக்கீடே தேவை
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் குறிப்பிடுகையில், தமிழக அரசின் இந்த முடிவு பெரும் கொள்ளையே அன்றி வேறல்ல. ஸ்லாப் சிஸ்டத்தில் காசைப் பிடுங்கும் விதத்தில் அரசு சரியாக இந்நேரத் தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. முதலில் மின்சார வாரியத்தில் உள்ள இடங்களை சரியாக நிரப்பாமல் இரு மாத வசூலிப்பைத் தொடர்ந்ததுதான், தற்போது கொரோனா காலத்தில் அடிபட்டிருக்கும் அடித்தட்டு மக்களை மேலும் அச்சுறுத்தும் நடவடிக்கையாக உருப்பெற்றிருக்கிறது.
முன்னதாக, மாதக் கட்டணம் கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கை யில் இந்த அளவு குழப்பங்களும் பிரச் சினைகளும் பெரிதாக எழவில்லை. காரணம் அப்போது யூனிட் கணக் கெடுப்பு நடைமுறையிலும் சரி, கட் டணத் தரவிலும் சரி, மக்களால் அது நுகரக்கூடியதாகவும் அனைத்தும் மிகத் தெளிவாக கண்டுணரப்படுவதா கவும் இருந்து வந்தது. ஆனால் இந்த இருமாத கணக்கெடுப்பு குழப்பத்தை யும் மன உளைச்சலையுமே மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இருமாதக் கட்டணத்தை ரத்து செய்வதோடு தற் போதுள்ள ஸ்லேப் சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.
ஏற்கனவே, கொரோனா ஊர டங்கால் வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவித்து வரும் நிலையில், மின் கட் டணம் என்ற புதிய அரக்கனால் மேலும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். ஆகவே, இந்த கொரோனா ஊரடங் கால் நிலைகுலைந்து போயுள்ள மக் களின் தலையில் இடியாய் விழுந் துள்ள மின்கட்டணம் முழுவதையும் அரசு தள்ளுபடி செய்திட வேண்டும். அல்லது தற்போதுள்ள வருமானமற்ற சூழ்நிலையை கவனத்தில் எடுத்து கொண்டு, அரசு நிர்ப்பந்தப்படுத்திய ஊரடங்கால் ஏற்பட்ட அதிகப்படியான மின்சார செலவிற்கான தொகையை யாவது அரசே ஏற்க வேண்டும். குறைந்தபட்சம், 500 யூனிட்டுக்கு கீழே என்ன கட்டண விகிதம் கணக்கிடப்பட் டதோ அதே கட்டண விகிதத்தையே கொரோனா நெருக்கடிகள் தீரும் வரை கணக்கிடப்பட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பா கும்.
-ச.காவியா.