அதிமுக கொடிக் கம்பம் சாய்ந்து விபத்து
கோவை, நவ.17- அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக அலட்சியமாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதில் அளித்திருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கோவை நீலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருக்கின்ற ராஜேஷ்வரியை ஞாயிறன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அதன்பின் மாநகர மாவட்ட திமுக சார்பில் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் கடந்த நவ.11 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை வர வேற்க, சாலைகளில் பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகை யில் கொடிக்கம்பங்கள் நடப்பட்டி ருந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து லாரி மோதி விபத்து ஏற்பட்டதில், ஆபத்தான கட்டத்தில் ராஜேஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்தி ற்கு ஆறுதல் தெரிவித்தேன்.
ராஜேஸ்வரியின் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நினைத்து பார்க்க முடியாத சம்பவமாக உள்ளது. இதுசம்பந்தமாக லாரி ஒட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர். ஆனால் இதற்கு காரணமான அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்த விபத்து தொடர்பான இச்சம்பவத்தை மறைக்க அதிமுக வினர் அதிக முயற்சி எடுத்தது. அதனை மீறி வெளியே இந்த செய்தி வந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக செய்தி யாளர்கள் கேட்ட கேள்விக்கு அலட்சியமாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதில் அளித்திருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. மேலும், தூத்துக்குடி சம்பவம் குறித்து தெரியாது என்று முதல்வர் எப்படி சொன்னாரோ அதேபோல் இந்த சம்பவம் குறித்து முதல்வரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அது பற்றி தெரியாது என்று சொல்லியி ருக்கிறார் ராஜேஸ்வரியை காப்பாற்ற தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மருத்துவ செலவை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். படுகாயமடைந்து தனது காலை இழந்த பெண்ணுக்கு திமுக துணை நிற்கும் குறிப்பாக, சிகிச்சை முடிந்து அந்த பெண்ணுக்கு செயற்கை கால் பொறுத்த வேண்டுமென்றால் அதற்கான செலவை திமுக ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்தார். முன்னதாக, திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினோடு மாநகர் மாவட்ட பொறுப்பு செயலாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, திமுக சொத்துபாது காப்புக் குழு தலைவர் பொங்க லூர்.ந.பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.