விழுப்புரம்.ஆக.10- விழுப்புரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலக பெருந்திட்ட வளா கத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமம், உரிமத்தை புதுப்பித்தல், புதிய வாகனங்களை பதிவு செய்தல், குடிபோதையில் வாக னம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்வதற்காக காவல்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்கள், விபத்தில் சிக்கும் வாகனங்களை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிக ளுக்காக வரும் பொதுமக்களிடம் உடனுக்குடன் பணியை செய்து கொடுக்க புரோக்கர்கள்மூலம் வட்டார போக்குவரத்து அதிகாரி கள் லஞ்சம் வாங்குவதாக விழுப் புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென் றுள்ளன. இதனையடுத்து, 8 பேர் கொண்ட குழுவினர் 2 கார்களில் வட்டார போக்குவரத்து அலுவல கத்திற்கு வந்து ஒவ்வொரு அறை யாக அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். வட்டார போக்குவரத்து அலுவலரின் கார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களின் அறைகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, வட்டார போக்கு வரத்து அலுவலர் பாலகுரு நாதன் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அலுவலரின் அறையிலிருந்த 3 இடைத்தரகர்களிடமும் விசா ரணை செய்தனர். அவர்களிடம் கிடைத்த தகவலையடுத்து, விண்ணப்பங்களையும் அலுவல ரின் செல்போனையும் கைப்பற்றி யார், யாரெல்லாம் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் என்ற விவரத்தை சேகரித்த னர். பின்னர், அலுவலகத்தின் பின்புறத்தில் நின்று கொண்டி ருந்த 3 இடைத்தரகர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப் போது, பொதுமக்களிடமிருந்து பெற்ற லஞ்சப் பணத்தை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் கொடுக்க வந்தது தெரியவந்தது. இந்த சோதனை இரவு 8 மணிக்கு முடிவடைந்தது. முடி வில் கட்டுக்கட்டாக பணம் சிக்கி யது. இதனை எண்ணிப்பார்த்த தில் ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் இருந்தது. இந்த பணத்திற்கு உரிய கணக்கு காட்ட முடிய வில்லை. அந்த பணத்தையும் காவல்துறையினர் கைப்பற்றி னர். அவற்றுடன் முக்கிய ஆவ ணங்களும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து லஞ்சம் வாங்கி யதாக வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர் முத்துக்குமார் ஆகிய இருவரின் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள னர்.