காவல்துறை தலைவரிடம் மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 5- தமிழகத்தில் மதக் கலவ ரத்தையும், வன்முறையையும் ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் பாஜக தலைவர்களான எச்.ராஜா, பொன். ராதாகிருஷ் ணன் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யும், கொலை மிரட்டல் விடுக் கப்பட்டுள்ள பாலபிரஜாபதி அடிகளாருக்கு உரிய பாது காப்பு வழங்க வேண்டியும் தமி ழக காவல்துறை தலைவரை வியாழனன்று(மார்ச்5) சந்தித்த தமிழக மக்கள் ஒற்றுமை மேடை தலைவர்கள் வலியுறுத்தினர். ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன், க.உதயகுமார், செயல்பாட்டுக்குழு உறுப்பினர் கள் கோபண்ணா, பேராசிரி யர் ஜவாஹிருல்லா, பிஷப் தேவசகாயம் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-
சென்னை வண்ணாரப் பேட்டை உள்ளிட்டு தமிழ கத்தின் பல இடங்களில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக பெண்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை அமைதியான முறையில் நடத்திக் கொண்டி ருக்கின்றார்கள். இந்த பெண் போராளிகள் காந்திய வழியில் தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு நீதி கேட்டு வருகிறார் கள். அமைதியான முறையில் தங்களின் நியாயமான கோரிக் கைக்காக போராட்டத்தை நடத்தி வரும் இவர்களின் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பலாத்காரத்தை பிர யோகிக்கும் வகையில் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா பேசி வருகிறார்.
“போராடி வரும் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லவில்லை என்றால் வண்ணாரப்பேட்டையி லும், தமிழகத்திலும் தில்லியில் நடந்தது போன்று வன்முறை நடைபெறும்” என்று கடந்த 2 நாட்களுக்கு முன்பாக எச்.ராஜா தனது டுவிட்டரில் பகிரங்க மாகக் கூறி வருகிறார். அவரது இந்த பேச்சு தில்லி தாக்குதலுக்கு பாஜகதான் கார ணம் என்பதை ஒப்புக்கொள்கி றது. அதேசமயம் அத்தகைய வன் முறையை இங்கும் தங்களால் கட்டவிழ்த்து விடமுடியும் என்று அச்சுறுத்துவது அமைதியான முறையில் போராடி வரும் பெண்களை கடுமையாக அச்சு றுத்துவதாக உள்ளது. இப்படி பெண் போராளிகள் மீது வன் முறையை தூண்டும் வகையில் பேசிவரும் எச்.ராஜாவை உட னடியாக கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறோம்.
அத்துடன் கிறித்துவ மதத் தலைவர்கள் மீது வன் முறையை ஏவிவிடும் வகையில் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவி லில் சமீபத்தில் பேசியிருக்கிறார். “கிறிஸ்தவ மதத் தலைவர்கள் அனைவரையும் ஓட ஓட விரட்டி யடிக்கும் காலம் விரைவில் வரும்” என்று அவர் கூறியுள் ளார். பாஜகவின் மூத்த தலை வர் ஒருவரின் இந்த பேச்சு தமி ழகத்தில் மிகக் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.
சமீபத்தில் கோவையில் இந்து முன்னணியினரை வெட்டிய வழக்கில் பாஜகவினர் கைது செய்யப்பட்டிருப்பது இந்த கட்சியில் எத்தகைய வன் முறையாளர்கள் இருக்கி றார்கள் என்பதை வெளிப் படையாக காட்டுகிறது. எனவே பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு குமரி மாவட்டத்தில் மட்டு மல்ல, தமிழகத்திலும் பெரும் கலவரத்தை தூண்டும் வாய்ப்பு உள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் பொன்.ராதா கிருஷ்ணன் மீது வழக்குத் தொடுத்து கைது செய்ய வேண் டும் என்றும், குமரி மாவட்டத்தி லுள்ள கிறித்துவ மதத் தலை வர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தமி ழக மக்கள் ஒற்றுமை மேடை யின் சார்பில் கேட்டுக்கொள்கி றோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.