2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நாள் முதலாய் ஊரக உள்ளாட்சித் தேர்தலை எதிர் கொள்ளத் தயங்கி வருகிறது தமிழக அரசு. தேர்தல் நடத்தப்படாமல் இரண்டு ஆண்டுக ளாக ஊரக உள்ளாட்சி நிர்வாகம் முடங்கிப் போ யுள்ளது குறித்து தமிழக ஆட்சியாளர்களுக்கு அக்கறையேதுமில்லை. தற்போதைய வரலாறு காணாத வறட்சி மற்றும் குடிநீர் பிரச்சனையை அதிகாரிகளிடம் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு. குடிநீருக்காகப் போராடும் மக்களைத் தனி அலுவலர்களே சமாளிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற அமைப்புகளில் ஏற்கெனவே பணி புரிந்து வரும் அலுவலர்களையே தனி அலு வலர்களாக தமிழக அரசு நியமனம் செய்து பணி புரிந்து வருவதால் ஏற்கெனவே உள்ள பணிச் சுமையுடன் நிர்வாகப் பணிகள் கூடியுள்ளன. போதாக்குறைக்கு காலியாக இருக்கும் கீழ்நிலைப் பதவிகள் முதல் மேல் நிலைப் பதவி கள் வரை பூர்த்தி செய்யப்படாமல் உள்ளதால் விரக்தியில் பணி புரிந்து வருகின்றர் அலுவ லர்கள். வழக்கமாக ஒதுக்கீடு செய்யப்படும் மாநில நிதிக்குழு ஒதுக்கீடு தொகையை சரிவர ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது அரசு.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுமார் 4000 கோடி ரூபாயை வழங்காமல் உள்ளது. இதனால் கீழ்மட்ட ஊழியர்களின் ஊதியம் கேள்விக் குறியாகி ஊதியமின்றிப் பணிபுரிய நிர்ப்பந்திக்கப்படும் அவல நிலை. ஊரக வளர்ச்சித் துறையில் பிரச்சனைக ளைத் தீர்க்க அரசு முன் வரவில்லை. எனவே தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் தொடர் போராட்டங்களை 2018ல் நடத்தி யது. அரசின் வாக்குறுதிப்படி ஊராட்சி செயலா ளர்களுக்குப் பதிவுரு எழுத்தர் ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் 2018ல் காந்தி பிறந்தநாள் அக்டோபர் 2 அன்று ரத்தக் கையெழுத்திட்ட பல்லாயிரம் கடிதங்களை அரசுக்கு அனுப்பி வைத்தது. அதன் விளைவாக அரசாணை பிறப் பிக்கப்பட்டது. எனினும் காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வில்லை. ஊதிய உத்தரவாதமில்லை. வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஊதிய முரண்பாடு களையப்படவில்லை.
சொந்தப் பணத்தைச் செலவழித்து ஊழி யர்களும் அலுவலர்களும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவலநிலையில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் அல்லல்பட்டு வருகின்றனர். மேலும் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்திற் குரிய நிதி மத்திய அரசிடமிருந்து ஒழுங்காக வருவதில்லை. பசுமை வீடுகள் திட்டத்திற்குப் போதிய நிதியை மாநில அரசும் விடுவிப்ப தில்லை. ஆனால் திட்ட இலக்குகளை முடிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இந்நிலையில் பயனாளிகளுக்கும் ஊரகவளர்ச்சித் துறை அலு வலர்களுக்கும் கசப்புணர்வே மேலோங்குகிறது. 2005ஆம் ஆண்டு இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தித்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சட்டமாக்கப் பட்டது. இத்திட்டத்தைத் தொடர்ந்து மக்களுக்கு வழங்கவும், பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்தவும் 100 நாட்கள் வேலையை 200 நாட்களுக்கு விரிவு படுத்தவும் செங்கொடி விவசாயிகள் சங்கமும் விவசாய தொழி லாளர்கள் சங்கமும் போராடி வருகின்றன. ஆனால் இத்திட்டத்தை மோடி2 அரசு ஒழித்துக்கட்ட மீண்டும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஜாடிக்கேற்ற மூடியாய் தமிழ்நாட்டிலும் மத்திய அரசை அடியொற்றி நிர்மூலமாக்கி வருகிறது மாநில அரசு.
கழிவறைகள் கட்டுதல், மத்திய மாநில அரசுகள் வழங்கும் இலவச வீடுகள், அங்கன் வாடி மையம் உள்ளிட்ட அரசு கட்டிட கட்டுமானப் பணிகள் போன்றவற்றில் சித்தாள் வேலை எனப்படும் மனிதநாட்கள் 100 நாள் வேலை திட்டத்தில் கழித்துக் கொள்ளப்படு கின்றன. இவை உண்மையில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்குப் போய்ச் சேருவதில்லை. எனவே ஏரி, குளம் கண்மாய், வரத்துக் கால்வாய், பாசனக்கால்வாய் தூர் வாருதல், இணைப்புச் சாலைகளுக்கான மண்வேலை என முன்பு வழங்கி வந்ததும், வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இத்திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த சட்டப் பாதுகாப்பும் ஏட்டோடு போனது.
தொடர்ந்து இத்திட்டத்தில் வேலை வழங்கப்படாததற்கு வேலையில்லா காலத்துக்கான நிவாரணம் நீர்மேல் எழுத்தானது. அரசின் மோசமான மக்கள் விரோத கொள்கையால் அலுவலர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தேவையற்ற மோதல் போக்கே உருவாகிறது. ஏற்கனவே ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஊராட்சி செயலாளர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை, பொறியியல் பிரிவில் சாலை ஆய்வாளர் முதல் பொறியாளர் வரை ஏராளமான கோரிக்கைகள் நிலுவையாக உள்ளன. முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள், கணினி உதவியாளர்கள் போன்ற தொகுப்பூதியம் மற்றும் அவுட்சோர்சிங் பணியாளர்களின் உழைப்பு பல்லாண்டுகளாக ஒட்டச் சுரண்டப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் எம்.சுப்ரமணியன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவராகவும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளராகவும் தீவிரமாக செயல்பட்டு வந்த சூழ்நிலையில் தமிழக அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக அவரைப் பணி ஓய்வு பெறும் நாளான 2019-மே 31 அன்றுப் பணியிடை நீக்கம் செய்தது. ஏற்கனவே ஊரகவளர்ச்சித்துறையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அரசு செயலாளரும் கூடுதல் முதன்மைச் செயலாளருமான ஹன்ஸ்ராஜ் வர்மா, இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் ஊரக வளர்ச்சித் துறையில் முக்கூட்டுக் களவாணிகளாக மேற்கொண்ட ஊழல் முறைகேடுகளை வெளியே கொண்டு வந்தது.
ஊரக வளர்ச்சித் துறையில் நியாய மான கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டங்களை நடத்தியது, ஜாக்டோ ஜியோ போராட்டங்களையும் தலைமை யேற்று தமிழகத்தில் வீச்சாக நடத்தியது போன்றவற்றைத் தாங்கிக் கொள்ள இயலாத தமிழக அரசு மாநிலத் தலைவர் எம்.சுப்ர மணியன் மீது பழிவாங்கும் நடவடிக்கையை ஏவி விட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் உணர்வுகளை உணர்ந்து மாநிலத் தலைவர் எம்.சுப்ரமணி யன் மீதான பணியிடை நீக்க ஆணையை ரத்து செய்துப் பணியிலமர்த்தி ஓய்வு பெறச் செய்ய அனுமதிக்க வேண்டியதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை உடன் நடத்த வேண்டியதும் தமிழக அரசின் தலையாய கடமை.
கட்டுரையாளர்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க முன்னாள் பொதுச் செயலாளர்