tamilnadu

img

வங்கதேசத்தில் 2 ரயில்கள் மோதிக்கொண்டதில் 15 பேர் பலி

வங்கதேசத்தில் 2 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
வங்க தேசத்தின் பிரம்மன் பாரியா மாவட்டத்தில் இன்று அதிகாலை சிட்டகாங் செல்லும் உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலும் டாக்கா செல்லும் நிதிஷா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 15 பேர்  பலியாகி உள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.