tamilnadu

img

அமிதாப்பச்சன் மீது உ.பி. பாஜக அரசு வழக்கு... இந்துக்கள் மனத்தைப் புண்படுத்தி விட்டாராம்...

லக்னோ:
இந்துக்களின் மனத்தைப் புண் படுத்தி விட்டதாக கூறி, இயக்குநர் ராஜமவுலிக்கு மிரட்டல் விடுத்து வரும் பாஜக, மற்றொரு புறத்தில், பாலிவுட்சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுக்கு எதிராக, வழக்கு போடும் அளவிற்கு சென்றுள்ளது.

அமிதாப் பச்சனின், “கோன் பனேகா குரோர்பதி” (கோடீஸ்வரன்) நிகழ்ச்சியின் 12-ஆம்பகுதி இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.இதில், கடந்த அக்டோபர் 30 அன்று நடந்த சிறப்பு ஒளிபரப்பில் நடிகர் அனூப் சோனியும், சமூக சேவகர் வில்சனும் கலந்து கொண்டனர். அவர்களிடம், கோடீஸ்வரன் போட்டிக்கான கேள்வியாக, “1927-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 அன்றுடாக்டர் அம்பேத்கரும், அவரது ஆதரவாளர்களும் எந்த நூலின் நகலை எரித்தனர்?” என்ற கேள்வியை அமிதாப் பச்சன் எழுப்பினார்.6 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகைக்கான இந்தக்கேள்விக்கு 1. விஷ்ணு புராணம், 2. பகவத்கீதை, 3. ரிக்வேதம்,4. மனுஸ்மிருதி என நான்கு விடைகளைக் கூறிய அமிதாப், அவற்றில் சரியான விடை எது? என்று கேட்டார்.அமிதாப் பச்சனின் இந்தக் கேள்விக்குத்தான் அவர் மீதுதற்போது லக்னோ காவல்நிலையத்தில், “இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தி விட்டார்” என்று உ.பி. பாஜக அரசுவழக்கு பதிவு செய்துள்ளது.அம்பேத்கர் மனுஸ்மிருதியைத்தான் எரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.