tamilnadu

img

இ.எம்.ஐ செலுத்துவதற்கான அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

வங்கி கடனுக்கான இ.எம்.ஐ செலுத்துவதற்கு, மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார்.

நாட்டில் கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் மேலும் 40 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படுகிறது. 4.4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால், வீடு, வாகனம் உள்ளிட்ட வங்கி கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது. வங்கி கடனுக்கான இ.எம்.ஐ செலுத்துவதற்கு, ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.