tamilnadu

img

என் மகன் சாவுக்கு யோகி அரசுதான் காரணம்

கமலேஷ்திவாரியின் தாய் அதிரடி குற்றச்சாட்டு

லக்னோ,அக்.20- உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹிந்து சமாஜ் கட்சியின் தலை வரும், முன்னாள் அகில பாரத இந்து மகா சபா பிரமுகருமான கமலேஷ் திவாரியை அக்டோபர் 18 வெள்ளிக் கிழமை பிற்பகல் தலைநகர் லக்னோவில் குர்ஷித் பாக் பகுதியில் அவரது அலுவல கத்தில் மர்மநபர்கள் கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தனர்.  அயோத்தி முதன்மை வழக்கில் அலகாபாத் உயர் நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து இந்து மகா சபா சார்பில் உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தவர் கம லேஷ் திவாரி .இவர் சர்ச்சையை எழுப்பக்கூடிய வகையில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.  உபி மாநில அரசின் போலீஸ், தீவிரவாத எதிர்ப்புப் படை ஆகிய அமைப்புகள் இந்த கொலை வழக்கை விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக அவ ரது அம்மா குஷ்மா கூறுகையில், என்னுடைய மகன் கமலேஷ் திவாரி கொலைக்குக் காரணம் யோகி ஆதித்யநாத் அரசுதான். கடந்த முறை இருந்த அகிலேஷ் யாதவ் ஆட்சியில் என் மகனுக்கு  17 போலீஸார் பாதுகாப்புக்கு நிய மிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் யோகி ஆட்சிக்கு வந்த உடனே பாதுகாப்புப் போலீசாரை படிப்படியாகக் குறைத்து என் மக னுக்கு கடைசியில் 4 போலீசாரே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட னர். அவர்களும் கையில் ஒரு பிரம்புமட்டும்தான் வைத்திருப் பார்கள். நான்கு போலீஸாராக குறைக்கப்பட்ட பாதுகாப்பும் கொலை நடந்த அன்று என் மக னுக்கு இல்லை. என்ன காரணத்தாலோ என் மகனுக்கு அன்று நான்கு போலீஸ் காரர்களுமே பாதுகாப்பு கொடுக்க வரவில்லை. இது ஆச்சரியத்தையும் சந்தேகத்தை யும் எழுப்புகிறது. என் மகனின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பல முறை மாநில அரசிடம் மனு கொடுத்தேன். ஆனால் மாநில பாஜக அரசு கண்டுகொள்ள வில்லை. கிராமத்தில் இருக்கும் கோவில்நிலம் தொடர்பாக ஒரு லோக்கல் பாஜக பிரமுகருக்கும் எனது மகனுக்கும் பகை இருந் தது. இதுபற்றியெல்லாம் விசா ரிக்க மாட்டார்கள். நான் சொல் வதை யாரும் கேட்கமாட்டார்கள் என்று வேதனையுடன் கூறுகிறார்.