இந்திய விடுதலைப் போராட்டவீரர். லாலா லஜபதிராய் 1865ஆம்ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் நாள் பிறந்தார்.
லாலா லஜபதிராய் ஒருஎழுத்தாளரும் அரசியல் தலைவரும்ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காகஇவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம்எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். ‘லாலா லஜபதி ராய்’ பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் “லட்சுமி காப்புறுதி கம்பெனி” ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.1905 ஆம் ஆண்டின் வங்காளப் பிரிவினை இவரது தேசிய உணர்வைத் தூண்டியதுடன், விடுதலைக்காகப் போராடும் பாதையில் அவரை உறுதியாக நிற்கவும் வைத்தது. பிரிட்டிஷ் அரசின் அடக்கு முறைகள், மக்கள் மத்தியில் தேசிய எழுச்சியையும், தன்மான உணர்வையும் தூண்டுவதில் அவர்களுக்கு மன உறுதியைக் கொடுத்தது.லாலா உள்ளிட்ட முன் குறிப்பிட்ட மூவரும், பிரிட்டிஷாரிடம் இருந்து ஓரளவு தன்னாட்சியைக் கோரினர். இது அக்காலத்தில் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது. லாலா லஜபதிராய் 1928ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் மறைந்தார்.