tamilnadu

உயர் அதிகாரிகள் பாலியல் தொல்லை: பெண் அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை

போபால்:
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்தபெண் ஒருவர்,  ஹைதராபாத்தில் உள்ள ‘பெல்’ நிறுவனத்தில்‘கணக்கு அலுவலராக’ வேலை செய்தவர். 33 வயதான இவர் வியாழக்கிழமை மியாப்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.இந்தத்தற்கொலை குறித்து மியாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்அதிகாரி எழுதி வைத்துள்ள கடிதத்தில், தனது நிறுவனத்தின் டிஜிஎம் மற்றும் ஆறு சக அதிகாரிகள் தனது மொபைல்போனை ஹேக் செய்து தனது மொபைலில் வரும் போன் அழைப்புகளை வைத்து மிரட்டி தன்னை துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அவர்களில் சிலர் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.பெண் அதிகாரியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.