tamilnadu

img

ஒன்றிய அரசின் பணிகளுக்கான தேர்வுகளை தமிழில் நடத்துக!

சென்னை, அக். 13 - ஒன்றிய அரசு பணிகளுக்கான தேர்வுகளை தாய் மொழியில் நடத்தக் கோரி வியாழனன்று (அக்.13) பணி யாளர் தேர்வு ஆணைய மண்டல இயக்குநர் அலுவலகம் முன்பு வாலிபர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு அமைச்சகங்கள், துறைகள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன  அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட இடங்களில் காலியாக உள்ள  20 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கையை ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்படும். மாநில மொழிகளுக்கு இடம் இல்லை என்று அறிவித்துள்ளது. ஒன்றிய அரசால் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் தேர்வு செய்யப்படும் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக உள்ளது.

இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட்டால், தமிழக இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவுகளை பறிப்பதாக அமையும். மொழி சமத்துவம் காப்பதோடு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழி களிலும் ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகள் நடத்த வேண்டும் என  வலியுறுத்தி தமிழகத்தில் 5 மையங் களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் உள்ள பணியாளர் தேர்வு ஆணைய தெற்கு மண்டல அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் தலைமை தாங்கினார்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒன்றிய அரசின் பணி யிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தமிழகத்திலிருந்து மட்டும் 50 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. தமிழில் தேர்வு நடத்தவில்லை என்றால், அதில் தேர்வர்கள் முழுமையாக பங்கேற்க முடியாத நிலை உருவாகும். எனவே, பணியாளர் தேர்வு ஆணையத்தின் போட்டித் தேர்வுகளை, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும்” என்றார்.

இந்தி திணிப்பை  எதிர்த்து தொடர் போராட்டம்

“இந்த தேர்வின் மூலம் சேவை துறையை சார்ந்த பணியிடங்கள் பெரு மளவில் நிரப்பப்பட உள்ளது. மொத்த இடத்தில் சுமார் 2 ஆயிரம் இடங்கள் தமிழகத்தில் நிரப்பப்படலாம். பிற மொழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களை தமிழகத்தில் பணிய மர்த்தினால், சேவைகளை வழங்கு வதில் பாதிப்பு ஏற்படும். ஏற்கெனவே இந்த சிரமத்தை தமிழக மக்கள் அனு பவித்து வருகிறார்கள். ஆகவே, ஒன்றிய அரசுப் பணிகளில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநில இளைஞர்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவ மும், வாய்ப்பும் கிடைக்க அரசியலமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழி களில் தேர்வு நடத்த வேண்டும். அனை த்து நிலைகளிலும் இந்தி என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா தலை மையிலான குழுவின் பரிந்துரையை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம். இந்தி திணிப்பிற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு குரல் வெடித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரள முதலமைச்சர்கள் இந்த மொழி திணிப்பிற்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அமித்ஷா பரிந்துரை ஒருபோதும் நிறைவேறாது. மக்கள் எதிர்ப்பின் காரணமாக இந்த பரிந்துரை ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது” என்றும் கூறினார். இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் நித்யராஜ், எல்.பி.சரவணத்தமிழன், தமிழ்ச்செல்வி, அபிராமி (வடசென்னை), சித்தார்த் தன், மணிகண்டன், பார்த்திபன் (மத்தியசென்னை), எம்.ஆர்.சுரேஷ், தீ.சந்துரு, திவாகர், ஜானகிதேவி (தென்சென்னை), சென்னை மாநகரா ட்சி மாமன்ற உறுப்பினர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கோவையில் மாநிலப் பொருளா ளர் எஸ்.பாரதி, மதுரையில் மாநில துணைத் தலைவர் டி.செல்வராஜ், திருப்பூரில் மாநில துணைத் தலைவர் மணிகண்டன், திருச்சியில் மாநில துணைத் தலைவர்கள் லெனின், செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.