tamilnadu

குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வாலிபர் சங்கம் வரவேற்பு

குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வாலிபர் சங்கம் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில்  அனைத்து குற்றவாளிகளும் கோவை மகளிர் நீதிமன்றத்தால்  குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப் பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2019 இல் வெளிவந்த போது, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் (DYFI) உரிய விசாரணை நடத்த வேண்டும். வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தீவிர போராட்டங்களை நடத்தியது.  கோவையில் நடத்தப்பட்ட போராட் டத்தில் காவல்துறையுடன் ஏற்பட்ட மோதலில் வாலிபர் சங்கத்  தோழர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது பொய் வழக்குகள்  பதிவு செய்யப்பட்டன. இருப்பினும் தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அன்றைய அஇஅதிமுக அரசு இச்சம்பவத்தை மறைக்க முயற்சித்த நிலையில், வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் போராட்டத்தால் காவல்துறை விசாரணை நிறுத்தப்பட்டு, சிபிஐ விசாரணைக்கு வழி ஏற்பட்டது. இத்தீர்ப்பை வரவேற்றுள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் மற்றும்  மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர், “பெண் கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமை யான சட்டங்களை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் பரிந்துரைத்த இழப்பீட்டுத் தொகை முழு மையாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைக்க அரசு உறுதி  செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர். பெண்கள்  மற்றும் குழந்தைகள் மீதான அத்துமீறல்களுக்கும் பாலியல்  வன்புணர்வுகளுக்கும் எதிராக இத்தீர்ப்பு ஒரு வரவேற்கத்தக்க நிகழ் வாக அமைந்துள்ளது என்று வாலிபர் சங்கம் தெரிவித்துள்ளது.