tamilnadu

மாணவனின் மண்டையை பிளந்த உடற்கல்வி ஆசிரியர் மீது வாலிபர் சங்கம் புகார் மனு

மாணவனின் மண்டையை பிளந்த உடற்கல்வி ஆசிரியர் மீது வாலிபர் சங்கம் புகார் மனு

விழுப்புரம் அருகே மாணவன் மண்டையை உடைத்த உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பள்ளி கல்வித்துறை, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன் கூறியதாவது :- விழுப்புரம் மாவட்டம், கண்ட மங்கலம் ஒன்றியம், பஞ்சமாதேவி கள்ளிகுளம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் எம்.சாது சுந்தர் (11) வி.அகரம், அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பில் படித்து வருகிறார்.  இம் மாதம் 14 ஆம் தேதி பள்ளியில் இரண்டு குழந்தைகளுக்கு இடையே சண்டை நடந்துள்ளது. அதை உடற்கல்வி ஆசிரியர் செங்கேணி யிடம் கூறியபோது, படிக்கட்டின் மேல் இருந்து மூங்கில் கம்பால் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மாணவர் மயங்கி விழுந்து ள்ளார்.  அப்போது, பள்ளி மாணவர்கள் சாது சுந்தருக்கு தண்ணீர் கொடுத்து வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். வலி தாங்காமல் மாணவன் அழுதுக்கொண்டே இருந்துள்ளான். இதனால், வகுப்பில் இருந்த ஆசி ரியர் மாணவனிடம் என்ன என்று கேட்டபோது, உடற்கல்வி ஆசிரியர் மண்டையில் கம்பால் அடித்தார். அதன்பிறகு கண் தெரியவில்லை என்று கூறிக்கொண்டே மீண்டும் மயங்கி விழுந்துள்ளான். உடனடியாக சக மாணவர்கள் பக்கத்தில் உள்ள ஆரம்ப சுகா தார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். சிகிச்சைக்கு போதிய வசதி இல்லை என்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் சொன்ன பிறகு, தலைமை ஆசிரி யர் முண்டியம்பாக்கம் அரசு மருத்து வமனைக்கு அழைத்து சென்றுள்ள னர். அங்கு சிகிச்சைக்கு போதிய வசதி இல்லை என்றும், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று சொன்ன பிறகுதான் குழந்தை யின் பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியர் தகவல் தெரிவித்துள்ளார்கள். பெற்றோர்கள் வந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஆசிரியர் மண்டையில் பலமாக அடித்துள்ளதால் நரம்பு மண்டலம் கடுமையாக பாதித்துள்ளது என்றும் மண்டை ஓட்டை திறந்து தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் அதுவரை எதுவும் கூறு முடியாது என்று சொல்லி மண்டையை இரண்டாக பிளந்து அறுவை சிகிச்சை செய்து தற்போது குழந்தை ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளார். மார்ச் 14 அன்று நடந்த இச்சம்பவம் குறித்து பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், வகுப்பாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் யாரும் முறை யாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை, பிரச்சனை யிலிருந்து எப்படி தப்புவது என்றே இருந்துள்ளனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து வள வனூர் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின்படி உதவி ஆய்வாளர் கௌதமன்  மருத்துவ மனைக்குச் சென்று சாது சுந்தரின் தந்தை முருகனிடம் வாக்குமூலம் பெற்று பதிவு செய்துள்ளார்.  மாணவனின் மண்டையை பிளந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மண்டை ஓட்டின் ஒரு பகுதி அகற்றப் பட்டு மாணவனின் வயிற்றில் பாது காப்பிற்காக அறுவை சிகிச்சை செய்து வைத்துள்ளனர்.. ஆக இரு அறுவை சிகிச்சை கள் மாணவருக்கு மேற்கொள்ளப் பட்டுள்ளது. மீண்டும் இரு மீள் அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது, மாணவர் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். ரண வேதனை மாணவருக்கு ஏற்படுத்திய உடற்கல்வி ஆசிரியர் பொய்யான தகவல்களை நீதி மன்றத்தில் சொல்லி முன் ஜாமீன் பெற்றுள்ளார்.  உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவரின் உயர் மருத்துவ சிகிச்சை வழங்கவும், மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும், மாண வனை தாக்கிய ஆசிரியர் செங்கேணி மீது துறை ரீதியான நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிரச்சனையை மூடி மறைக்கும் வேலையில் ஈடுபடும் வகுப்பாசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளதாக கூறினார்