தாதங்குப்பம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் வாலிபர்கள், பெண்கள் வலியுறுத்தல்
ய்யூர், ஜூன் 27- தாதங்குப்பம் கிராமத்தில் சுடுகாட்டு சாலை, குடிதண்ணீர் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம்,இலத்தூர் ஊராட்சி ஒன்றியம் தொண்டமநல்லூர் ஊராட்சி, தாதங்குப்பம் கிராமத்தில் பல ஆண்டு காலமாக பட்டியல் சமூக மக்களின் சுடுகாட்டு பாதைக்கு கருங்கல் ஜல்லி சாலையை சிமெண்ட் அல்லது பேவர் பிளாக் சாலையாக அமைத்திட வேண்டும், குடிதண்ணீருக்கு புதிய கிணறு எடுத்து, இடிக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை புதிதாக அமைத்து குடிநீர் விநியோகம் செய்யவேண்டும், கிராம சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், கை பம்பு, தெருவிளக்கு, மினி டேங்கை சீரமைக்க வேண்டும், தொடர் மின்னழுத்த குறைவு காரணமாக வீட்டு உபயோக மின்பொருள் சேதம் அடைவதை தவிர்க்க தாதங்குப்பத்தில் புதியமின் மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வாலிபர், மாதர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் லத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பாடை கட்டி கொண்டு செல்லும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து இலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்பு நடை பெற்ற பேச்சு வார்த்தையில் அடுத்த 2 நாட்களுக்குள் குடிதண்ணீர் பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் எனவும் படிப்படி யாக 6 மாத காலத்திற்குள் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரி வித்ததன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலை யில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.சதீஷ், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க. ஜெயந்தி, விதொச மாவட்ட செயலர் க.புருஷோத்தமன், வாலிபர் சங்கம் ஒன்றிய அமைப்பாளர் அ.கோதண்டராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.