tamilnadu

img

ஈஷா யோகா மையத்தில் தூக்கில் தொங்கிய இளைஞர் உடல்

கோவை, ஜூலை 22- கோவை ஈஷா யோகா மையத்தில்  ஆந்திர மாநில வாலிபர் மின் விசிறி யில் தொங்கியபடி உடல் மீட்கப் பட்டுள்ளது. இவர் கொலை செய்யப் பட்டாரா அல்லது  தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.  கோவையை அடுத்த பூண்டி மலைப்பகுதியில் ஈஷா யோகா மையம் உள்ளது.  இந்த மையத்திற்கு ஏராளமானோர் வந்து தங்கி யோகா பயிற்சி பெற்று வருகின்றனர். கட்டிட விதி மீறல், வன நிலம் ஆக்கிரமிப்பு, பழங்குடியின மக்கள் நிலம் அபகரிப்பு என தொடர்ந்து இம்மையத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்து கொண்டே வருகிறது. சர்ச்சைக்கு பெயர் பெற்ற மையமாக ஈசா மையம் இருந்து வருகிறது. 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி னத்தைச் சேர்ந்த கொல்லு சத்தியமு என்பவரது மகன் கொல்லு ரமணா (32). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை  செய்து வந்துள்ளார். ஈஷா யோகா மையத்தில் உள்ள விடுதியில் தங்கி  ஆறு மாதம் யோகா பயிற்சி பெரும் எண்ணத்துடன் வந்துள்ளார். நாள்தோறும் காலை 5.30 மணிக்கு யோகா வகுப்பு துவங்கும். ஆனால்  வெள்ளியன்று கொல்லு ரமணா யோகா வகுப்பிற்கு வராததையடுத்து அங்கு தங்கியுள்ள அனிஸ்போஸ்லே என்பவர் ரமணா அறைக்கு சென்று  பார்த்துள்ளார். அப்போது மின்விசிறி யில் தூக்கில் தொங்கியபடி உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள் ளார். இதுகுறித்து யோகா மையத்தின் நிர்வாகிகளிடம் தகவல் கொடுத்துள் ளார். ஆனால் அவர்கள் இதுகுறித்து காவல்துறைக்கு எந்த தகவலும் தெரி விக்கப்படவில்லை எனகூறப்படுகிறது

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தை  சேர்ந்த வாலிபர் ஈஷா யோகா மையத் தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சமூகவலைத் தளங்களில் செய்தி வைரலானது. இதனையடுத்தே காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து ஈஷா மையம் சென்ற ஆலாந்துறை காவல்துறையினர் ரமணாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த னர். ஆந்திர வாலிபர் ரமணா கொலை  செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை  செய்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதனிடையே அவர் தங்கி இருந்த அறையில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில், வாலிபர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியதாகக் கூறப்படுகிறது. அதனை கைப்பற்றிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கோவை ஈஷா யோகா மையத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிற நிலையில் தற்போது ஆந்திர மாநில வாலிபரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.