‘ஜூலை 9’ வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வீர்!
தமிழக மக்களுக்கு சிபிஎம் அறைகூவல்
திருச்சிராப்பள்ளி, ஜூன் 25 - ஜூலை 9 அன்று மத்திய தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்யுமாறு, அனைத்துப் பகுதி மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டு கோள் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் புதனன்று துவங்கியது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அசோக் தாவ்லே, கே.பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண் முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், என். குணசேகரன், கே. பாலபாரதி, மாநில செயற்குழு உறுப் பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர் கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், ஜூலை 9 வேலைநிறுத்தத்தை ஆதரித்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தும் மோடி அரசு “இந்திய அளவில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் மத்திய சம்மேளனங்கள் ஜூலை 9 அன்று பொது வேலை நிறுத்தத் திற்கான அறைகூவலை விடுத்துள்ளன. ஒன்றிய பாஜக அரசு, கார்ப்ப ரேட் ஆதரவுக் கொள்கைகளை கடைப்பிடித்து தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கையாண்டு வருகிறது. போராடிப் பெற்ற சட்ட உரிமைகளை பறித்து, சுரண்டலைத் தீவிரப்படுத்தும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை செய்துள்ளது. அனைத்து மாநில அரசுகளையும் மேற்படிச் சட்டங்களுக்கான விதிகளை உருவாக்கி அமலாக்கிட கட்டாயப்படுத்துகிறது. கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களை முறியடிப்போம் இந்த சட்டத் திருத்தங்கள், தொழி லாளர்களின் வேலை நேரத்தை அதி கரிப்பதற்கும், ஆட்குறைப்பு செய்வ தற்கும் ஏதுவானதாக உள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு குறித்து எதுவும் பேசாத ஒன்றாக உள்ளது. எனவே, அனைத்து ஜனநாயக அமைப்பு களும், கார்ப்பரேட் ஆதரவு சட்டத் தொகுப்பை முறியடிக்க போராட வேண்டியது அவசியம். மக்களுக்கு சேவை செய்யவும், அரசு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும் உரு வாக்கப்பட்ட பொதுத்துறை நிறு வனங்களையும், பங்குகளையும் கார்ப்பரேட் ஆதரவு பாஜக அரசு, தனியாருக்கு தாராளமாக விற் பனை செய்து வருகிறது. வேலை வாய்ப்பு என்ற பெயரில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏராளமான சலு கைகளை வாரி வழங்கி வருகிறது. உண்மையில் பன்னாட்டு நிறு வனங்கள் எதிர் பார்த்த அளவில் வேலை வாய்ப்பை உருவாக்க வில்லை. மாறாக, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகிறது. கிராமப்புற விவ சாயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு குறைவான கூலி மற்றும் அதிக வேலை நேரம் என கடுமையாக சுரண்டி வரு கிறது. இந்த அணுகுமுறை கட்டுப் படுத்தப்படுவதன் மூலமே, தொழி லாளர்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் பெறும். கிராமப்புற தொழிலாளர்களின் வேலை உரிமையும் பறிப்பு கிராமப்புற தொழிலாளர்கள் வாழ்க்கையில் மேம்பாடு காண தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தினை 200 நாட்களாக உயர்த்தவும், ஒரு நாள் கூலியை ரூ. 600 ஆக அதிகரிக்கவும் வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை. ஆனால், மோடி அரசு இந்த சட்ட அமலாக்கத்திற்கான நிதியைக் குறைத்த காரணத்தால், கோடிக் கணக்கான மக்கள் இத்திட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். இந்த கோரிக்கை மீதும் தொழிற் சங்கங்கள் வெளிப்படுத்தும் உணர்வு மிக நியாயமானது. அந்த அடிப்ப டையில் ஜூலை 9 அன்று நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆதரிக்கிறது. இதர ஜனநாயக சக்திகளும் இந்த வேலை நிறுத்தத் தை ஆதரிக்க வேண்டுகோள் விடுக்கிறது. மறியல் போராட்டங்களில் சிபிஎம் பங்கேற்கிறது அதுமட்டுமல்ல, ஜூலை 9 அன்று வேலை நிறுத்தம் நடைபெறும் நாளில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் மறியல் உள்ளிட்ட கிளர்ச்சி போராட்டங் களில் ஐக்கிய விவசாயிகளின் முன்னணி அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகளும் ஆதரித்து பங்கெடு ப்பதாக அறிக்கைகள் வெளியிட்டுள் ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர் களும் இந்த போராட்டங்களில் நேரடி யாக ஈடுபட்டு வெற்றிபெறச் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.