மகளிர் தினம் கருத்தரங்கம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சங்க அலுவலகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. கரூர் மாவட்ட மகளிர் துணை குழு அமைப்பாளர் இரா. முத்துமாரி தலைமை வகித்தார். மகளிர் துணை குழு உறுப்பினர் எஸ்.தமிழ்மணி வரவேற்பு பேசினார். அரசுப் பணியில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும், அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை முதல்வர் மருத்துவர் சா.நளினி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மு.செல்வராணி, மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம், மாவட்ட தலைவர் எம்.எஸ்.அன்பழகன் ஆகியோர் கருத்தரங்கில் பேசினர். துணைக்குழு உறுப்பினர் ச.காயத்ரி நன்றி கூறினார்.