திருநெல்வேலி, ஜூலை 7- நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் பெரியாற்று படுகையில் இரண்டு ஆறுகள் சந்திக்கும் கருஞ்சினாபேரி பகுதி யில் விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்கள் ஏராளமாக உள்ளன. ஞாயிறன்று காலை அந்த பகுதியில் குட்டிகளுடன் வந்த காட்டு யானைகள் வாழை தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்தன. இதில் 200க்கும் மேற்பட்ட வாழைகள், 5 வயதுள்ள 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களின் மட்டை களை சாய்த்தும் குருத்தோலைகளை பிடுங்கியும் அட்டகாசம் செய்தன. இந்த யானைகள் அனைத்தும் கடந்த 2 மாதங்களில் வடகரை ,மேக்கரை, பகுதி யிலிருந்து கடையநல்லூர் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. இந்த காட்டு யானை களை வனத்துறையினர் வனத்துக்குள் விரட்டியடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.