tamilnadu

காட்டு யானைகள் அட்டகாசம்

திருவில்லிபுத்தூர், மே 31- திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மா, தென்னை உள்ளிட்ட விவசாயம் அதிகளவு  நடை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மாங்காய் சீசன் என்பதால் மா மரத்தில் மாங்காய்கள் ஓரளவிற்கு விளைந்துள்ளது. இந்த நிலையில் திரு வில்லிபுத்தூர் அருகே அத்திக்கோவில்  பகுதியில் உள்ள விநாயகமூர்த்தி என்ப வருக்குச் சொந்தமான மாந்தோப்பிற்குள் புகுந்த காட்டுயானைகள் மா மரங்களை உடைத்து சேதப்படுத்தி மாங்காய்களை  தின்றுவிட்டு சென்றுவிட்டன. இத னால் அச்சமடைந்துள்ள அப்பகுதி  விவ சாயிகள் யானைகளை வனத்திற்குள் விரட்டவும். பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டு மெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.