tamilnadu

img

கம்யூனிஸ்ட் கட்சிக்கு பத்திரிகை ஏன்? - எஸ்.ஏ.மாணிக்கம்,பொது மேலாளர், கோவை

இன்றைய வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப புரட்சிக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தனியான பத்திரிகை அவசியமா என்ற கேள்வி சிலருக்கு  எழலாம். இதர பத்திரிகைகளைப் போல பல்வேறு தகவல்கள், செய்திகளுடன் வணிக ரீதியான பாணியில் கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகைகள் இருக்க முடியாது.அதற்கென அரசியல், தத்துவார்த்த, அமைப்பு  ரீதியான பின்புலங்கள் உண்டு.  உலகம் முழுவதும் உள்ள நாடுகள் தத்தமது நாடுகளின்  ஆளும் வர்க்கத்தின் நல னுக்கான கருவியாகவே ஊடகங்களும் இருக்கும்.

எனவே இத்தகைய ஊடகங்கள் சமூக  முரண்பாடுகளை வெளிக்கொணரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே உழைக்கும் மக்களை வர்க்க ரீதியாக  திரட்டுவதற்கும் சமூகத்தின் பொதுக்கருத்தில் ஊடுருவியுள்ள வர்க்க அரசியலை எதிர்கொள்ளவும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பத்திரிகை தேவையாகிறது.  இன்றைய தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி ஆதிக்கம் வகிக்கும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,யூடியூப், கூகுள் போன்ற செய்தி நிறுவனங்கள்  பில்லியனர் முதலாளி களுக்கு சொந்தமாக உள்ளன. அவைகளும் முதலாளித்து வத்திற்கு எதிரான குரல்களை தடுப்பதில் துணைபோகின்றன.   இந்தியாவிலும் ஊடகங்கள்  ஆளும் வர்க்கத்தின் நலனை பாதுகாக்கும் நோக்கத்துடனே செய்திகள் வெளியிடு கின்றன.  அம்பானி, அதானி உள்ளிட்ட இந்திய பெரு நிறு வனங்களால் கொல்லைப்புற வழியாக பொருளாதாரத்தில்  செய்யப்படுகிற தலையீடுகள், அத்துமீறல்கள் ஊடகங் களில் பெரியளவிற்கு வெளிச்சத்திற்கு வருவதில்லை. அவ்வாறு வெளியிடும் ஊடகங்கள் மோடி அரசாங்கத்தால் பழிவாங்கப்படுகிறது.

அண்மையில் பிபிசி செய்தி நிறு வனமும். என்டிடிவி நிறுவனமும் ஒன்றிய அரசின் வரு மான வரித்துறையால் ரெய்டு நடவடிக்கையால் மிரட்டப் பட்டதை அறிவோம்.  அம்பானியின்   செய்தி நிறுவனமான நியுஸ் 18 நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட டி.வி சேனல்களை  நடத்துகிறது. இதன் மூலம்  வாரந்தோறும் 80 கோடிப் பேர் பார்வையாளர்களாக உள்ளனர்  என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது இத்தகைய விரிவான மக்கள் மத்தியில் கார்ப்பரேட் கொள்ளைகள் எவ்வாறு போய்ச் சேரும்? லெனின் வழிகாட்டுகிறார் தனி நபர்களின் செல்வாக்கினாலும், வட்டாரத் துண்டுப் பிரசுரங்களாலும் சிறு புத்தகங்களாலும் பிறவற்றாலும் நடை பெறுகின்ற சிதறலான கிளர்ச்சியை முறையான பொதுக் கிளர்ச்சி மூலம் வலுப்படுத்துவதும் அவசியம். இந்த பொதுக் கிளர்ச்சியைப் பத்திரிகைகள் மூலமே முறையாக நடத்த முடியும். இதுவே நமது போர் நடவடிக்கையின் ஆரம்பத் துறை யானாலும் மிக முக்கியமான துறையாகும். இதை நாம் எவ்வ ளவு உறுதியாக நிறுவியிருக்கிறோம் என்பதை கணிப்பதற்கு செய்தித்தாள் எவ்வளவு அடிக்கடியும் ஒழுங்காகவும் விநி யோகிக்கப்படுகிறது என்பதே மிகத் துல்லியமான அளவு கோலாகப் பயன்படும் என்கிறார் லெனின்  ( எங்கிருந்து துவங்குவது நூலில் – லெனின் ) மேலும், தோழர் லெனின் ‘ நம் கருத்தில் ஓர் அகில ருஷ்ய அரசியல் செய்தித்தாளை நிறு வுவதே நம் செயலின் ஆரம்பப் புள்ளியாக, நாம் விரும்பும் அமைப்பை (சோசலிசத்தை) படைக்கும் முதல் நடைமுறை வேலையாக இருக்க வேண்டும்.

இந்த செய்தித்தாளே அமை ப்பை ஒரே சீராக வளர்க்கவும், செழுமைப்படுத்த வும் விரிவுபடுத்தவும் அடிப்படையம்சமாகப் பயன்படும். எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு அவசியமானது ஒரு செய்தித்தாளே’ என்கிறார். ( எங்கிருந்து துவங்குவது நூல், பக்கம்  66) எங்களின் பத்திரிகை “ வெகுமக்களின் துன்ப துயரங்களையும் அதற்கான  அவர்களின் போராட்டங்களை யும் வெளிக்கொணரும் கண்ணாடியாக எங்களின் பத்திரிகை இருக்கும்.அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலை ஆகியவற்றின் உண்மை யான நலன்களை எதிரொலிக்கும்.அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும், ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதும்,மக்களின் போராட்ட உணர்வுகளை வளர்ப்பதுவுமான பணிகளை மேற்கொள்ளும்” என்று கூறுகிறார் தோழர் ஜோதிபாசு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவின் வாராந்திர ஏடான பீப்பிள் டெமாக்ரஸியின் முதல் இதழில் எழுதப்பட்ட தலையங்கத்திலேயே மேற்கண்டவாறு தோழர் ஜோதிபாசு குறிப்பிடுகிறார்.

மக்களின் போராட்ட உணர்வுகளை வளர்த்தெடுக்கும் பணியினை பத்திரிகையின் மூலம் கம்யூனிஸ்ட் இயக்கம் மேற்கொள்கிறது. ஆளும் வர்க்க நலனுக்கான கருத்தாக்க த்திற்கு எதிராகச் சமர் புரிய வேண்டிய இடத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் இருப்பதால் நேரடியாக மக்களைச் சந்திக்கும் பிரச்சாரக் கருவியாக பத்திரிகையை கம்யூனிஸ்ட் இயக்கம் பயன்படுத்துகிறது. வெகுமக்கள் மத்தியில் விரிவான அளவில் கொண்டு செல்வதின் மூலம் கருத்தாக்கத் தளத்திலும் வளர்ச்சியினை எட்டமுடியும் என்று நம்புகிறது.

அளவு மாற்றம் குண மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை கம்யூனிஸ்ட் இயக்கம் உறுதியாக நம்புகிறது. பொதுவான செய்தித்தாளை நடத்தும் நோக்கத்திற்காக நம் சக்திகளை நாம் ஒன்று திரட்டினால் அந்த வேலை அதிகத் திறமை வாய்ந்த பிரச்சாரகர்களுக்கு மட்டுமல்லாமல் மிக வும் திறமை வாய்ந்த அமைப்பாளர்களுக்கும் கட்சியின் அதித் திறன் படைத்த அரசியல் தலைவர்களுக்கும் தேவையான பயிற்சியளிக்கும். அவர்களை முன்னணிக்கு கொண்டு வரும். அவர்கள் தக்க தருணத்தில் தீர்மானமான போருக்காக அழைப்பு விடுக்கவும், அதற்குத் தலைமை தாங்கவும் முடியும் என்று உறுதிபடக்கூறுகிறார் மாமேதை லெனின்.