புதுதில்லி, மார்ச் 26- ஊனமுற்ற மாணவர்கள், ஒன்றிய அரசு நடத்திடும் சிவில் சர்வீசஸ் பிரதானத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், இந்தியன் போலீஸ் சர்வீஸ், இந்தியன் ரயில்வே பாதுகாப்புப் படை சர்வீஸ் மற்றும் தில்லி, டாமன், டையு, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் போலீஸ் சர்வீஸ்களுக்கும் விண் ணப்பிக்கலாம் என உச்ச நீதி மன்றம் இடைக்கால உத்தரவு பிறப் பித்திருப்பதை, ஊனமுற்றோர் உரி மைகளுக்கான தேசிய மேடை வரவேற்றுள்ளது. இது தொடர்பாக தேசிய மேடை யின் பொதுச் செயலாளர் முரளீதரன் ஓர் அறிக்கையில் மேலும் கூறி யிருப்பதாவது: சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் ஊனமுற்றோர் வெற்றி பெற்றி ருந்தாலும், மேலே குறிப்பிட்ட பணிகளில் சேர்வதிலிருந்து ஒன்றிய அரசு விலக்கு அளித்திருந்தது. இதனை எதிர்த்து ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
போரி டாத வகையைச் சார்ந்த பணிகளில் நியமிப்பதற்கு ஒன்றிய அரசு தடை விதித்திருப்பது அரசமைப்புச்சட்டத் திற்கு விரோதமானது என்றும், இது சமத்துவம் மற்றும் பாகுபாடின்மை ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்கும் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான சட்டத்திற்கும் எதிரானதாகும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்மீது நடைபெற்ற வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றத்தின் ஏம்.எம்.கான்வில்கர், அபாய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வாயம், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பிரதானத் தேர்வில் வெற்றி பெற்ற ஊன முற்ற மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பணிகளைச் சுட்டிக்காட்டி (cadre preference) 2022 ஏப்ரல் 1 மாலை 4 மணிக்குள் யூனியன் பப்ளிக் சர்வீஜ் கமிஷ னுக்குப் போய்ச்சேரும்படி விண் ணப்பிக்கலாம் என்று இடைக்கால ஆணை பிறப்பித்திருக்கிறது. இதன்மீது அரசாங்கம் தன் உறுதிவாக்குமூலத்தைத் தாக்கல் செய்திட இரண்டு வாரங்கள் கால அவகாசம் அளித்துள்ள நீதிமன்றம் அதே சமயத்தில், வழக்கின் அடுத்த விசாரணை தேதியை ஏப்ரல் 18க்கு ஒத்தி வைத்துள்ளது. வழக்கில் ஊனமுற்றோருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடி, அவர்களுக்கு ஆதரவான உத்த ரவைப் பெற்றுத்தந்த மூத்த வழக்குரைஞர்கள் அரவிந்த் தாடர், கோட்லா ஹர்ஷவர்தன் மற்றும் அவர்தம் குழுவினருக்கும் ஊனமுற் றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை நன்றி தெரிவித்துக்கொண்டுள் ளது. (ந.நி.)