tamilnadu

img

திருநந்திக்கரையில் சாதி மதங்களைக் கடந்த அன்பு

குலசேகரம், மார்ச் 1- குமரி மாவட்டம் திற்பரப்பு பேரூ ராட்சியில் பாஜகவினர் பரப்பிய சாதி மதவாத பிரச்சாரங்களைப் புறக்க ணித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறச்செய்தனர் திருநந்திக்கரை மக் கள். அதற்கும் மேலாக நன்றி தெரி விக்க வந்த வெற்றியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் பொதுமக்க ளுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். திற்பரப்பு பேரூராட்சியின் 7,9,10 ஆகிய 3 வார்டுகள் திருநந்திக்கரை பகுதி யை உள்ளடக்கியவை. மூன்று வார்டு களிலும் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இந்துக்களும் கிறித்தவர்களும் நல்லிணக்கத்தோடு வாழும் பகுதியாகும். 7 ஆவது வார் டில் போட்டியிட்டவர் சிபிஎம் குமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ். தலித் கிறித்தவரான இவர் ஏற்கனவே இருமுறை பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தலைவராக இருந்த இவரது தந்தை எஸ்.செல்லையாதாஸ் மறைவை யொட்டி இங்கு நேரடி இடைத்தேர்தல் நடந்தது. கட்சியின் முழுநேர ஊழிய ரான எஸ்.சி.ஸ்டாலின்தாஸ் வேட்பா ளராக நிறுத்தப்பட்டார்.

மஞ்சள் காமா லையால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டா லின்தாஸ் தேர்தல் பிரச்சாரத்துக்கு வர முடியாத நிலையில் மறைந்த சிஐடியு தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் ஜே.ஹேமச்சந்திரன், இவருக்காக வாக்கு சேகரித்து மகத்தான வெற்றியை பெற்றுத் தந்தார். இம்முறை பாஜக வினர் ஸ்டாலின்தாஸுக்கு எதிராக நடத்திய மதவெறி பிரச்சாரத்தை புறந் தள்ளி வெள்ளிக்கனியை அவருக்கு அளித்துள்ளனர். சிபிஎம் வேட்பாளர் பி.ஷீஜா 8 ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற் றுள்ளார். இந்த வார்டில் மலையா ளத்தை தாய் மொழியாக கொண்டவர் கள் அதிகம் உள்ளனர். அவர்களிடம் மொழியையும் சாதியையும் கூறி பாஜக வினர் பிரச்சாரம் செய்தனர். ஆனால் வாக்காளர்கள் இவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர். இவர் வாக்கா ளர்களுக்கு நன்றி தெரிவித்து அம்மன் கோவில் பகுதிக்கு சென்றபோது மக்க ளின் அன்பான வரவேற்பையும் பெற் றார். பி.ஷீஜா கூட்டுறவு சங்க இயக்கு நராகவும் உள்ளார். இதுபோல் 10 ஆவது வார்டு உறுப்பி னராக சிபிஎம்மின் ஏ.மல்லிகா வெற்றி பெற்றார். இவரது கணவர் தேர்தல் பணிக்கிடையே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த வார்டிலும் சாதி மதங்களைக் கடந்து மகத்தான வெற்றி யை மல்லிகாவுக்கு வாக்காளர்கள் அளித்துள்ளனர்.