tamilnadu

img

“கல்விக்கு எந்தத் தடை வந்தாலும் தகர்ப்போம்!”

சென்னை, ஜூலை 15 - “தமிழக மாணவர்கள் கல்வி கற்க எந்தத் தடை வந்தாலும் தகர்ப்போம்” என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட்டின் போது, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், காலை உணவுத் திட்டத்தை விரிவு படுத்தி உத்தரவிட்ட முதல் வர் மு.க. ஸ்டாலின், திரு வள்ளூர் மாவட்டம் கடம்பத் தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி யில் திங்களன்று திட்டத்தை யும் துவங்கி வைத்தார். தொடர்ந்து குழந்தை களுடன் அமர்ந்து உணவு உண்ட முதல்வர், அருகில் அமர்ந்திருந்த சிறுமி களுக்கு உணவை ஊட்டி விட்டு அளவளாவினார். முன்னதாக திட்டத்தைத் தொடங்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பசியோடு ஒரு குழந்தை கூட தவிக்கக் கூடாது தமிழ்நாட்டு மாணவர் கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது. அது பசியாக இருந்தாலும் சரி, ‘நீட்’ தேர்வாக இருந்தா லும் சரி. அந்தத் தடைகளை நாங்கள் உடைக்கிறோம். முன்பு நாம் ‘நீட்’ தேர்வை எதிர்த்தபோது ‘ஏன் எதிர்க் கிறீர்கள்’ என்று நம்மைக் கேள்வி கேட்டனர்.  இன்று ஒட்டுமொத்த நாடும் ‘நீட்’ தேர்வை தமிழகத்தின் வழியில் எதிர்க்கிறது.  பல தலைவர்கள், மாணவர்கள் அமைப் பினர் தற்போது ‘நீட்’ தேர்வை எதிர்க்கின்றனர். ஏன், உச்சநீதிமன்றமே ‘நீட்’ தேர்வைப் பற்றி கேள்வி கேட்கிறது. கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஒன்றிய அரசு தயாராக இருக்கிறதா? அத்தகைய ஆக்கப்பூர்வமான செயலை ஒன்றிய அரசு செய்யுமா?. மாணவர்கள் படிக்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதே எனது எண்ணம். அது பசியோ, நீட் தேர்வோ, புதிய கல்விக் கொள் கையோ!. தமிழ்நாட்டு மாண வர்களின் கல்விக்கான தடை எதுவாக இருந்தாலும், அதை நாங்கள் தகர்ப்போம். கல்வி எனும் சொத்தை மாணவர்கள் பெற உறு துணையாக இருப்போம். மாணவர்களே, நீங்கள் கல்வியில் கவனம் செலுத் துங்கள். அதுமட்டும்தான் யாரும் திருட முடியாத சொத்து. நீங்கள் உயர, உங்கள் வீடு உயரும். தொட ர்ந்து நாடும் உயரும்! இவ்வாறு முதல்வர் பேசினார்.