தஞ்சாவூர், ஜூலை 17- எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவ னங்களைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றி ணைந்து போராட வேண்டும் என அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கப் பொதுச் செயலர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் சனிக்கிழமை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சாவூர் கோட்ட வைர விழா ஆண்டு இரு நாள் பொது மாநாட்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: இந்தியாவில் சுதந்திரத்துக்கு பிறகு பொதுத்துறை நிறுவனங்களுக்கு முதன்மை யான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், நம் முன்னோர்கள் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை 1956 ஆம் ஆண்டு உருவாக்கினர். இதன் மூலம், நம் நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சி உறு திப்படுத்தப்பட்டது. இந்நிறுவனம் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்துள்ளது. இந்தியா சுயசார்பு நிலையை அடைந்த தற்குப் பொதுத்துறை நிறுவனங்களும் முக் கிய காரணம். தற்போது இந்த சுயசார்பு தன்மை சீர்குலைக்கப்பட்டு வருகிறது. காப் பீட்டுத் துறையைத் தனியார்மயமாக்குவ தற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து, மின் துறை உள் ளிட்டவையும் தனியார்மயமாக்கப்படுகிறது. இதேபோல, விண்வெளி, அணு ஆராய்ச்சி யையும் தனியார்மயமாக்குவதற்கான முயற்சி நிகழ்கிறது. தற்போது இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தையும் பொதுப் பங்குகள் வெளி யீட்டின் மூலம் தனியார்மயமாக்க அரசு முனைந்துள்ளது.
ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் மிகப்பெரும் பாதிப்பு ஏற் பட்டுள்ளது. நிர்வாகத் திறமையின்மை கார ணமாக பண மதிப்பிழப்பு, பல மடங்கு நிர்ண யிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட நட வடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. இதேபோல, காப்பீட்டுத் துறையையும் சீர்குலைப்பதற்கான நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிக வலிமையான நிறுவனமான எல்ஐசி யின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.39 லட்சம் கோடி. இது, இந்தியாவிலுள்ள ஒட்டு மொத்த தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் சொத்து மதிப்பைவிட மூன்று மடங்கு அதி கம். 60 ஆண்டுகளுக்கு மேலாக எல்லோரும் பாடுபட்டு இந்நிறுவனத்துக்கு நன்மதிப்பை உருவாக்கியுள்ளோம். எனவே எல்.ஐ.சி. உள் ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களைக் காப் பாற்ற அனைத்து மாநிலங்களிலுள்ள தோழர் களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இவ்வாறு ஸ்ரீகாந்த் மிஸ்ரா பேசினார். இந்த மாநாட்டுக்கு சங்கத்தின் தஞ்சாவூர் கோட்டத் தலைவர் சே.செல்வராஜ் தலைமை வகித்தார். கோட்ட பொதுச் செயலாளர் வ. சேதுராமன் வரவேற்றார். அகில இந்திய காப் பீட்டுக் கழக ஊழியர் சங்க இணைச் செயலர் எம்.கிரிஜா, தஞ்சை முதுநிலைக் கோட்ட மேலா ளர் கே.கே.சுஜித், தென் மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு தலைவர் பி.பி. கிருஷ்ணன், பொதுச் செயலாளர் டி.செந்தில் குமார், துணைத் தலைவர் கே.சுவாமிநாதன், எல்ஐசி முதல் நிலை அதிகாரிகள் சங்க தஞ்சை கோட்டத் தலைவர் சோழ.சுந்தர பாண்டியன், லியாபி தஞ்சை கோட்டத் தலை வர் வி.செல்வகணேசன், எல்ஐசி ஓய்வூதியர் சங்க தஞ்சை கோட்டச் செயலாளர் ஆர். புண்ணியமூர்த்தி, லிகாய் மாநிலச் செயலா ளர் என்.ராஜா, மண்டலக் குழு உறுப்பினர் பி. சத்தியநாதன், முன்னாள் இன்சூரன்ஸ் ஊழி யர் சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். சங்கப் பொருளாளர் எம்.ரவிசங்கர் நன்றி கூறி னார்.