திருநெல்வேலி, ஜூன் 21- மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை குறைந்ததால், குற்றால அருவிகளில் குறைவான அளவில் நுால் போல் தண்ணீர் விழுகிறது. இத னால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். நெல்லை மாவட்டத் தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மித மான மழை பெய்ததால், குற்றால அருவிகளில் குறைவான தண்ணீர் விழு கிறது. இதனால் குற்றா லத்தில் சீசன் மந்தமாக வே உள்ளது. வெள்ளிக் கிழமை வேலை தினம் என்பதால் குற்றாலத்தி ற்கு வரும் சுற்றுலா பயணி களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. மெயின்அருவியில், குறைவான தண்ணீரே கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஆறுதலாக குளித்தனர். இதனால் குற்றாலத்தில் குளித்து மகிழ வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அடுத்த 2 நாட்கள் விடு முறை என்பதால் பயணி கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.