tamilnadu

img

விவசாயத் தொழிலாளர் சங்கக் கொடியை ஏற்றி வைத்த கிராம மக்கள்

அரியலூர், ஏப்.10- ஜெயங்கொண்டம் அருகே கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கொடியினை கிராம மக்கள் தாமாக முன்வந்து ஏற்றி வைத்தனர்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட கங்கவடங்கநல்லுர் கிராமத்தில் பாண்டியன் ஏரி சர்வேக்குட்பட்ட பகுதியில் தலித் மக்கள் 100 ஆண்டு காலமாக சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.  உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ற பெயரால் நீர்நிலை புறம்போக்குகளை அகற்றக் கூறிய தீர்ப்பில் சொல்லியிருக்கக் கூடிய சரத்திற்கு மாறாக மாற்று இடம் வழங்காமல் இடிப்பதற்கு அதிகாரிகள் ஆர்வம் காட்டி வந்தனர்.  இந்நிலையில், விவசாயிகள் சங்கம் மற்றும்  சிபிஎம் கட்சியின் முயற்சியால் இதனை தடுத்து நிறுத்தி, கிராம மக்களை பாதுகாத்திட அரசு அதிகாரிகளிடம் மக்களை அழைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக அக்கிராம மக்கள் தாமாக முன் வந்து அப்பகுதியில் விவசாய தொழிலாளர் சங்க கொடியேற்றி வைத்தனர்.  விழாவிற்கு கிளை தலைவர் குமார் தலைமை தாங்கினார்.  விதொச மாவட்ட செயலாளர்  எம்.இளங்கோவன் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம், செயற்குழு உறுப்பினர்கள் டி.அம்பிகா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி, மாவட்ட துணை செயலாளர் எஸ்.மீனா எஸ்.குமார், டி.தியாகராஜன், ஆர்.ரவீந்திரன், என்.அருணாசலம், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம், விதொச ஒன்றிய தலைவர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் கவியரசன், பட்டாபிராமன், புரட்சி பேரரிவாளன், ராஜா, பிரேமா, மாலதி மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.