திருப்பூர், மே 31- தமிழ்நாட்டில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆக வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு கிராம சுகாதார செவிலி யர் சங்கத்தின் 6ஆவது மாநில மாநாடு திருப்பூரில் திங்களன்று எழுச்சியாக நடைபெற்றது. திருப்பூர் பழைய பேருந்து நிலை யம் அருகில் உள்ள தனியார் மண்ட பத்தில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.பர மேஸ்வரி தலைமை ஏற்றார். வரவேற் புக் குழுத் தலைவரும், அரசு ஊழியர் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளரு மான மா.பாலசுப்பிரமணியன் வர வேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.செல்வம் மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார். மாநிலப் பொதுச் செயலாளர் பா. ராணி வேலையறிக்கை முன் வைத் தார். மாநிலப் பொருளாளர் அ.பிர கலதா வரவு செலவு அறிக்கை முன் வைத்தார். தமிழ்நாடு எம்ஆர்பி செவி லியர் மேம்பாட்டுச் சங்க மாநிலத் தலைவர் கு.சசிகலா, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., க.செல்வராஜ், அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மு.செல்வராணி ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்தி ருந்த கிராம சுகாதார செவிலியர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டின் தொடக்கத் தில் திருப்பூர் மாநகரின் மையப் பகு தியில் புது மார்க்கெட் வீதி, காமராஜர் சாலை, பல்லடம் சாலை வழியாக காமாட்சியம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள மாநாட்டு மண்ட பத்தை வந்தடைந்தனர். இங்கு கொடி யேற்றம், தியாகிகள் அஞ்சலி நிகழ்ச்சி யுடன் மாநாடு தொடங்கியது.
தீர்மானங்கள்
இம்மாநாட்டில் ஆண், பெண் பாலின பாகுபாடு களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பழைய பென்சன் திட் டத்தை அமல்படுத்த வேண்டும், சிசு மரணம், மகப்பேறு மரணம் ஆகிய நிகழ்வுகளில் கிராம சுகாதார செவி லியர்களை மட்டும் பொறுப்பாக்கு வதை கைவிட வேண்டும், ஊட்டச் சத்து துறையில் இருந்து கிராம செவிலியர்களாக பணியமர்த்தப் பட்டவர்களின் 50 சதவிகித பணிக் காலத்தை ஓய்வூதிய பலன்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் முறைப் படுத்த வேண்டும், கிராம சுகாதார செவிலியர் பணித்தன்மை குறித்த அர சாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில நிர்வாகிகள் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலி யர் சங்க புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவர்: சி.பர மேஸ்வரி, மாநில துணைத் தலை வர்கள்: ஏ.பி.பிரபாவதி, சி.இளஞ்சி யம், ஏ.ராணி, பி.பரமேஸ்வரி, சி. அமுதா, வி.விஜயராணி, பொதுச் செயலாளர்: பா.ராணி, மாநில இணைச் செயலாளர்கள்: சுமதி, அன்னலட்சுமி, எஸ்.மகேஸ்வரி, தமிழ்ச்செல்வி, பத்மினி, டி.புனிதா, மாநிலப் பொருளாளர்: கே.ஜெய லட்சுமி, மாநில அமைப்புச் செயலா ளர்: ஏ.பிரகலதா, மாநிலத் தணிக்கை யாளர்கள்: கவிதா, கலைச்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டை நிறைவு செய்து வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. அன்பரசு உரையாற்றினார். நிறை வாக வரவேற்புக்குழுச் செயலாளர், மாநிலத் துணைத் தலைவர் ஏ.ராணி நன்றி கூறினார்.