சென்னை, ஜன. 1- தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குட் பட்டவர்கள் பிரிவில் உள்ள 33 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை திங்களன்று (ஜன. 3) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்தியாவில் தற்போது ஒமைக் ரான், கொரோனா இரு வைரசுகளும் சமூகப் பரவலாக மாறிவிட்டது. இதனால் இந்தியாவில் 3ஆவது அலை உருவாகி இருப்பதாக நிபுணர் கள் கருதுகிறார்கள். அடுத்த மாதம் இது உச்சத்தை தொடும் என்று கூறப்ப டுகிறது. ஒமைக்ரான் வைரஸ் எந்தவித அறிகுறியும் இல்லாமல் பரவுகிறது. இது மருத்துவ துறையினர் மற்றும் அரசு வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா, ஒமைக்ரான் வைரசுகளை கட்டுப் படுத்த தடுப்பூசி செலுத்துவது ஒன்றே சிறந்த வழி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 15 முதல் 18 வயதுக் குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதுபோல 60 வயதுக்கு மேற்பட்டவர்க ளுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நாடு முழு வதும் திங்கட்கிழமை முதல் சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப் படும் என்று பிரதமர் கடந்த 25ஆம் தேதி அறிவித்தார். சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர் களுக்கு வருகிற 10ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 7 கோடி ஆகும். தமிழகத்தில் 33 லட்சம் பேர் இந்த பிரிவில் உள்ள னர். இவர்கள் சனிக்கிழமை (ஜன. 1) முதல் தங்களது பெயரை கோவின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நாடு முழுவதும் 15 முதல் 18வயதுக்குட்பட்டவர்கள் கோவின் இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்தனர். இந்த பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது. ஆதார், பாஸ்போர்ட், குடும்ப அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகள் பயன்படுத்தி முன்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குட் பட்டவர்கள் பிரிவில் உள்ள 33 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை திங்களன்று (ஜன. 3) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். பொது இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது. 15 முதல் 18 வயதுக்குட் பட்ட அனைவருக்கும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட் டுள்ளது. அதற்கேற்ப கோவாக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட் டுள்ளன.
தமிழகத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்பதால் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்க ளுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஒமைக்ரான் அச்சுறுத்தலால் நேரடி வகுப்புகள் தொடங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. என்றாலும் பள்ளிகள் மூலம் 15 முதல் 18 வயதுக்குட் பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை பட்டியலாக தயாரித்து தரும்படி பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த மாணவர்களை அழைத்து தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 15 முதல் 18 வயதுக்குட் பட்டசிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் 100 விழுக் காட்டை எட்டும் வாய்ப்புள்ளது.