விரும்பியதை வாங்க முடியாத
90 சதவிகித இந்தியர்கள்!
இந்திய மக்கள் தொகையில் 90 சதவிகி தம் பேர், தாங்கள் விரும்பும் பொருட்கள், தேவைப்படும் வசதிகளுக்கு செலவிட முடி யாத நிலையில் உள்ளனர் என்று ‘ப்ளூம் வென்ச்சர்ஸ்’ (Blume Venture’s) நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகையில், 10 சதவிகி தம் பேர் - அதாவது 13 முதல் 14 கோடி பேர் மட்டுமே நுகர்வோர் சந்தையில் செலவிடக் கூடியவர்களாக இருக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது. மூலதன நிறுவனமான ‘ப்ளூம் வென்ச் சர்ஸ்’, ‘சிந்து சமவெளி ஆண்டறிக்கை- 2025ஐ’ (Indus Valley Annual Report 2025) வெளியிட்டுள்ளது. அதில் தான் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. விரிவடையாத நுகர்வு ஆசியாவின் மூன்றாவது பெரிய பொரு ளாதாரமாக இந்தியா உள்ளது. இந்தியா வின் நுகர்வு வளர்ச்சி, உலகின் முக்கிய பொருளாதாரங்களை விடவும் அதிகமாக உள்ளது. எனினும், மக்கள் தொகை அடிப்ப டையில் பார்க்கையில், இந்தியாவின் ‘நுகர்வு வர்க்கம்’ பெரிய அளவிற்கு இன்னும் விரிவ டையவில்லை என்று ‘ப்ளூம் வென்ச்சர்ஸ்’ கூறுகிறது. அதற்கான காரணத்தையும் அது தெரிவித்துள்ளது. இந்தியாவில் பணக்கா ரர்கள் மேலும் பணக்காரர்களாகிக் கொண்டே போகின்றனர்.
அவர்களிடம் மேலும் மேலும் செல்வம் குவிந்து கொண்டே இருக்கிறது. ஆனால், பெரும் எண்ணிக்கையிலான மக் கள் போதிய வருவாய் இல்லாமல் மேலும் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டு வரு கின்றனர். இதனால், இந்தியாவின் ‘நுகர்வு வர்க்கம் விரிவடைவதில்லை, மாறாக ஆழ மடைகிறது’ என்று ‘ப்ளூம் வென்ச்சர்ஸ்’ தெரி விக்கிறது. சிலரிடமே குவியும் செல்வம் இந்தியாவின் உயர்மட்டத்தில் உள்ள 10 சதவிகிதம் செல்வந்தர்கள் 1990-ஆம் ஆண்டில் நாட்டின் வருமானத்தில் 34 சதவிகி தத்தைக் கட்டுப்படுத்துபவர்களாக இருந்த னர். அதே 10 சதவிகிதம் பேர், 2025 ஆம் ஆண்டில் நாட்டின் வருமானத்தில் 57.7 சதவிகிதத்தைக் கட்டுப்படுத்துபவர்களாக மாறியிருக்கின்றனர். இதற்கு நேர்மாறாக, 1990 காலகட்டத்தில், 50 சதவிகித இந்தியர்கள் நாட்டின் வரு மானத்தில் 22.2 சதவிகிதத்தைக் கொண்டி ருந்த நிலையில், அது 2025-இல் வெறும் 15 சத விகிதமாக குறைந்துள்ளது. வாங்கும் சக்தி இல்லை இது நுகர்வுச் சந்தையிலும் எதிரொலிப்ப தைத் தான் ‘ப்ளூம் வென்ச்சர்ஸ்’ சுட்டிக் காட்டியுள்ளது. நாட்டின் மக்கள் தொகை யில் 90 சதவிகிதம் பேர், அதாவது 100 கோடி இந்தியர்கள், பொருட்கள் அல்லது சேவை களை வாங்குவதற்கு உரிய சக்தி (வரு வாய்) இல்லாமல் இருக்கின்றனர். 10 சதவிகி தம் பேர் மட்டுமே ஒட்டுமொத்த இந்திய நுகர்வோர் சந்தையையும் இயக்குபவர் களாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. தயங்கித் தயங்கிச் செலவு 30 கோடி பேர் தங்கள் விரும்பும் பொருட் களை வாங்க ஆர்வம் கொண்ட நுகர்வோர் களாக உள்ளனர். டிஜிட்டல் கட்டண முறை வசதியால், இந்த 30 கோடி மக்கள் செலவு செய்ய தொடங்கியுள்ளனர்.
ஆனால் அவர்களும் எச்சரிக்கையாகவே செலவு செய்கின்றனர். சேமிப்பிலும் வீழ்ச்சி இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளில் இந்தி யர்களின் வாங்கும் திறன் குறைந்து வரு வது மட்டுமல்லாமல், நிதி சேமிப்பிலும் கூர்மையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடன்களும் பெரிய அளவிற்கு அதிக ரித்துள்ளன என்று ‘ப்ளூம் வென்ச்சர்ஸ்’ கூறு கிறது. ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் இந்த அறிக்கை குறிப்பிட் டுள்ளது. அதில், சந்தையில் மலிவு விலை வீடுகள், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 40 சத விகிதமாக இருந்தது. இது தற்போது சந்தை யில் 18 சதவிகிதம் என்ற அளவிற்கே உள்ளது. 13 ஆண்டுகள் முந்திய சீனா மற்றொரு புறத்தில், இந்தியாவின் நுகர்வு வளர்ச்சி (10 சதவிகித செல்வந்தர்கள் மூலம்) குறிப்பிடத்தக்க அளவில் இருந்தபோதி லும், சீனாவோடு ஒப்பிடும்போது, இந்தியா குறைந்தது 13 ஆண்டுகள் பின்தங்கியிருக்கி றது என்றும் ‘ப்ளூம் வென்ச்சர்ஸ்’ தெரி விக்கிறது. 2023-ஆம் ஆண்டில், இந்தியாவின் தனி நபர் நுகர்வு 1,493 டாலராக இருந்தது. ஆனால், 2010-ஆம் ஆண்டிலேயே இதனைச் சீனா கடந்து விட்டது. 2010-இல் சீனாவின் தனி நபர் நுகர்வு 1,597 டாலர் என்பதையும் ‘ப்ளூம் வென்ச்சர்ஸ்’ சுட்டிக்காட்டியுள்ளது.