இந்தியாவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் உதவினார்! பாக். பிரதமர் ஷெபாஸ் பகிரங்க பாராட்டு
இஸ்லாமாபாத், ஜூன் 5- “இந்தியாவுடனான மோத லை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப்-இன் தலையீடு முக்கியமானது” என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கா தூதரகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியுள்ளார். அப்போது தான், இந்த பாராட்டை அவர் தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியாவுடன் அமைதியை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முழு முயற்சி எடுத்து வருகிறார்” எனவும் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் வெளியுற வுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ வும் சில நாட்களுக்கு முன் இதேபோன்ற கருத்தை தெரிவித்திருந்தார். “போர் நிறுத்தத்தை சாத்தியமாக்க டிரம்பின் முயற்சிகள் உதவி செய்தது என்பதால் அவருக்கு அந்தப் பெருமை உரியது தான். இந்தப் போர் நிறுத்தத்தை தொடர்ந்து பேணுவதில் பாகிஸ்தானுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருந்தால், ஒரு விரிவான உரையாடலை ஏற்பாடு செய்வதில் அமெரிக்காவின் பங்கு பாகிஸ்தானுக்கும் பய னுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமானது தான்” என்று தெரிவித்திருந்தார். “நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்” என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். ஒருமுறை, இருமுறையல்ல, இதுவரை 10 முறைக்கும் மேலாக அவர் கூறிவிட்டார். இதனை வெளிப்படையாக இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை. பாகிஸ்தான் ராணுவம் கேட்டுக் கொண்டதாலேயே போர் நிறுத்த உடன்பாட்டுக்கு வந்த தாகத் தான் கூறி வருகிறது. ஆனால், பாகிஸ்தான் பிரதமரின் பாராட்டு, போர் நிறுத்தத்தில் அமெரிக்கத் தலையீடு இருந்ததையே உறுதிப்படுத்துவதாக உள்ளது.