கோவை, மார்ச் 28- ஒன்றிய மோடி அரசின் தொழிலா ளர் விரோத நடவடிக்கையை கண் டித்து திங்களன்று அனைத்து தொழிற் சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்று கைதாகினர். கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக தொழிலாளர் நலச்சட்டங்கள் மாற்றிய மைப்பது, பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு தாரைவார்ப்பது, எரிபொருட்களின் விலையை கடுமை யாக உயர்த்துவது, மூலப்பொருட் களின் விலை உயர்வை கட்டுப்படுத்தா மல் சிறு, குறு தொழில்களை சீரழிப்பது உள்ளிட்ட ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரேத நடவடிக்கைகளை கண்டித்து மார்ச் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறை கூவல் விடுத்தது. அதன்படி, திங்க ளன்று நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
அதன்ஒருபகுதியாக, கோவை மாவட்டத்தில் அரசு பேருந்துகள் முழு மையாக இயக்கப்படவில்லை. 80 சதவிகித ஆட்டோக்கள் இயங்க வில்லை. இதேபோன்று, கோவை மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நிறு வனங்களான அக்வாசப், டெக்ஸ்மோ போன்ற தொழிற்சாலைகளில் தொழி லாளர்கள் முழுமையான வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற னர். தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்க ளும் முழுமையான ஆதரவை தெரி வித்தனர். இதற்கிடையே கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் சண் முகம் தலைமையில் மறியல் போராட் டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், எல்பிஎப் ரத்தினவேல், ஏஐடியூசி ஆறு முகம், ஐஎன்டியூசி செல்லகுட்டி, எஸ்எம்எஸ் வீராச்சாமி, எம்எல்எப் தியாகராஜன், ஏஐசிசிடியு தாமோ தரன், எஸ்டிடியு ரகுபு நிஷர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர். இதேபோன்று தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட் டோர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, கைக்குழந்தைகளுடன் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சியில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறி யல் போராட்டத்திற்கு தமிழ்நாடு போக் குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) மாவட்ட செயலாளர் வேளாங்கண்ணி ராஜ் தலைமை வகித்தார். இதில், எல்பிஎப் சங்க அமைப்புச் செயலா ளர் கார்த்திகேயன், ஏஐடியுசி பொறுப் பாளர் சன்முகம், எச்எம்எஸ் பொறுப் பாளர் கமல் ரவி, பிஎஸ்என்எல் ஓய்வூதி யர் சங்கத்தின் மாநில அமைப்புச் செய லாளர் நிசார் அகமது உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதா கினர். மேட்டுப்பாளையம் பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற மறியல் போராட் டத்திற்கு சிஐடியு தாலுகா செயலாளர் எஸ்.பாஷா தலைமை வகித்தார். இதில், சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகி பாலகுமார், எச்எம்எஸ் பொறுப்பாளர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டு கைதாகினர். இதே போல் சிங்காநல்லூர், கவுண்டம் பாளையம், சூலூர், கோவை வடக்கு, குனியமுத்தூர் உள்ளிட்ட 10 இடங் களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய் யப்பட்டனர்.
சேலம்
சேலம் கோட்டை ஸ்டேட் வங்கி முன்பு சிஐடியு மாநில துணைத்தலை வர் ஆர்.சிங்காரவேலு தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் எல்பிஎப் மாவட்ட செயலாளர் பொன்னி. பழனியப்பன், ஏஐடியூசி மாவட்ட செய லாளர் முனுசாமி, எச்எம்எஸ் மாநில துணைத்தலைவர் கணேசன், ஏஐசிசி டியு மாவட்ட செயலாளர் வேல்முரு கன், சிஐடியு நிர்வாகிகள் எஸ்.கே. தியாகராஜன், டி.உதயகுமார், பி.பன் னீர்செல்வம், ஏ.கோவிந்தன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் ஏ.ராமமூர்த்தி உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டு கைதாகினர். இதேபோல் மேட்டூர், வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, ஓமலூர், மேச் சேரி, சங்ககிரி, கொங்கணாபுரம், எடப் பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏற் காடு ஆகிய பகுதிகளில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல் பூங்கா சாலையில் நடை பெற்ற மறியல் போராட்டத்தில், சிஐ டியு மாநிலச் செயலாளர் டி.டெய்சி, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உத வியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் எல்.ஜெயக்கொடி, எல்பிஎப் மாவட்ட கவுன்சில் செயலாளர் கபாடி ச.பழனியப்பன், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் பி.தனசேகரன், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலு சாமி, ஐஎன்டியுசி கே.பழனிவேலு, எச்எம்எஸ் பி.பாலாஜி மாதேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், திருச்செங்கோடு, எலச்சிபாளையம், குமாரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை ராசிபுரம் ஆகிய பகுதிகளில் மறியல் போராட் டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அசோகன், மாவட்ட பொருளாளர் ஆர்.ரங்கசாமி, எல்பிஎப் மாவட்ட செயலாளர் சுந்தர மூர்த்தி, ஏஐடியுசி ஜெயராமன், ஏஐசி சிடிசியு மாணிக்கம், எல்டியுசி பி.மாரி யப்பன், ஏஏஐசிசிடிசி வெங்கடேசன் உட்பட திரளானோர் கலந்து கொண்ட னர். இதையடுத்து போராட்டத்தில் ஈடு பட்ட அனைவரையும் காவல் துறை யினர் கைது செய்தனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் 6 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதில், 489 பெண் கள் மற்றும் 605 ஆண்கள் என மொத் தம் 1094 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் ஒருபகுதியாக உதகை ஏடிசி சுதந்திர திடலில் சிஐடியு மாவட்ட செய லாளர் ரமேஷ் தலைமையில் தொழிற் சங்கத்தினர் மற்றும் அங்கன்வாடி பணி யாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதையடுத்து போராட்டத்தில் ஈடு பட்ட அனைவரையும் காவல் துறையி னர் கைது செய்தனர்.