திருநெல்வேலி, ஆக. 26- குற்றாலத்தில் உள்ள முக்கிய அருவிகளில் இன்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி களை ஒட்டியுள்ள இடங்களில் பெய்த மழையால், குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றா லம் அருவி ஆகியவற்றில் நீர்வரத்து அதி கரித்துள்ளது. தற்பொழுது குற்றாலத்தில் சீசன் காலம் என்பதால் அங்குள்ள அனைத்து அருவிகளிலும் கூட்டம் அலை மோதியது. கடந்த 3நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டம் அதிகரித்து சுற்றுலா பயணி கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். பழைய குற்றால அருவி, ஐந்தருவியிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. திங்கட்கிழமை வேலை தினம் என்றாலும் அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.