tamilnadu

img

நகராட்சி கட்டடங்களில் தங்கும் விடுதிகள் அமைக்க

நகராட்சி கட்டடங்களில் தங்கும் விடுதிகள் அமைக்க 

மேட்டுப்பாளையம், ஜூன் 27– சுற்றுலாப்பயணிகளின் தேவை யறிந்து மேட்டுப்பாளையம் நக ராட்சி கட்டடங்களில் தங்கும் விடுதி கள் அமைக்கப்பட வேண்டும் என சிஐடியு மேட்டுப்பாளையம் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநாடு வலியுறுத்தியுள்ளது. கோவை மேட்டுப்பாளையம் தாலுகா சிஐடியு பொதுத்தொழி லாளர் சங்கத்தின் 13 ஆவது மாநாடு, மேட்டுப்பாளையம், சேரன் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது சங்கத்தின் தலை வர் சம்சுதீன் தலைமை ஏற்றார். மூத்த தலைவர் சி.பெருமாள் சங்க  கொடியை ஏற்றி வைத்தார். அறிக் கையை சங்கத்தின் பொதுச்செய லாளர் பாஷா முன்வைத்தார். இதில், சிஐடியு மாவட்டத்தலைவர் கே.மனோகரன், செயலாளர் கிருஷ் ணமூர்த்தி ஆகியோர் உரையாற்றி னர்.  இதில், மேட்டுப்பாளையம் ராமப்ப ரோட்டில் கட்டப்படும் காய் கறி மார்க்கெட் பணியை விரைவு  படுத்தவும் சந்தை கடையில் உள்ள காய்கறி சந்தையை சாலையோர சிறு வியாபாரிகளுக்கு முன்னு ரிமை அடிப்படையில் வழங்க வேண் டும். பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கும், பள்ளி, கல் லூரி மாணவ, மாணவிகளுக் கும் இடையூறாக உள்ள டாஸ்மாக்  கடைகளை அப்புறப்படுத்த வேண் டும். சாலையோர சிறு வியாபாரிக ளுக்கு நகராட்சி நிர்வாகம் ஆங் காங்கே கடைகள் அமைத்து  சாலையோர சிறு வியாபாரிக ளுக்கு முன்னுரிமை வழங்க வேண் டும். பாதாள சாக்கடை திட்டப் பணிகளை துரிதமாக செயல்ப டுத்தி பவானி ஆற்றில் கழிவு நீர்  கலப்பதை தடுத்து நிறுத்த வேண் டும். சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் மேட்டுப்பாளையம் நகர் பகு திக்கு சுற்றுலாப் பயணிகள் பயன் பெறும் வகையில் புதிதாக கட்டப் படும் பேருந்து நிலையம் நெல்லித் துறை சாலை பாரதியார் நூற் றாண்டு கட்டிடம் உள்ளிட்ட நக ராட்சி கட்டிடங்களில் தங்கும் விடுதி கள் அமைத்திட வேண்டும். மேட்டுப் பாளையத்தில் இருந்து இந்தியா வில் உள்ள பல்வேறு மாநிலங்க ளுக்கு ரயில்களை இயக்கிட வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில் தலைவராக சம்சு தீன், பொதுச் செயலாளராக பாஷா, பொருளாளராக சத்யா, துணை  நிர்வாகிகள் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர்.