tamilnadu

img

சாதியும், மதமும் உயிர்ப்புடன் உள்ளது ஏன்?

சென்னை, டிச. 18- இந்தியாவிற்கே உண்மையான வரலாறு இல்லாத காரணத்தால்தான் சாதியும், மதமும் இன்றும் உயிர்ப் புடன் உள்ளது என நூல் வெளியீட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவர் டி.கே.ரங்க ராஜன்  கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய களப்பணி யில் கம்யூனிஸ்ட்டுகள் பாகம் 3 “பொதுவுடைமை இயக்கத்தில் பூத்த மலர்கள்” நூல் வெளியீட்டு விழா எழுத் தாளர் ச.தமிழ்ச்செல்வன் தலை மையில் சென்னையில் ஞாயிறன்று (டிச. 18) நடைபெற்றது. நூலை மூத்த தலைவர் டி.கே.ரங்க ராஜன் வெளியிட, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பாரதி ஆகியோர் பெற்றுக்  கொண்டனர்.

இதில் டி.கே.ரங்கராஜன் பேசு கையில்,  இந்தியாவிற்கே வரலாறு கிடையாது. அதன் விளைவாகத்தான் சாதியும், மதமும் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன. மகாபாரதமும், இதிகாசமும் வரலாறாகக் கூறப்படு கிறது. தமிழ்நாட்டிற்கும் வரலாறு கிடை யாது. கலை இலக்கியங்கள்தான் நம்மு டைய வரலாறாக உள்ளது. கிரேக்க நாட்டிற்கு வரலாறு உள்ளது. சீனா விற்கு 5 ஆயிரம் வருடங்களுக்கான எழுதப்பட்ட வரலாறு உள்ளது. இந்தியா விற்கு பாஹியான்,  யுவான் சாங் வந்த போது என்ன எழுதினாரோ அது தான் வரலாறு எனக் கருதிக் கொண்டி ருக்கிறோம். எனவே வரலாற்றை உரு வாக்க வேண்டிய மிகப்பெரிய கடமை  நம்முன் உள்ளது என்றார். வர்க்க போராட்ட வரலாற்றை உரு வாக்கும் போது அது எதிர்காலத்திற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். வர்க்கப் போராட்டத்தின் எழுச்சி, அது  உருவான காலம், அதனுடைய வெற்றி, தோல்வி குறித்து எழுதப்பட வேண்டும்.

அந்த பணிகளையும் ஜி.ராமகிருஷ் ணன்  மேற்கொள்ள வேண்டும் என்றும் டிகே.ரங்கராஜன் கேட்டுக் கொண்டார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசுகையில், களத்தில் பணி யாற்றியவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக இதில் ஒரு ஒற்றுமை காணப்படுகிறது. இதில்  இடம்பெற்றுள்ள அனைவரும் ஏழை, எளிய அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் பிற அரசியல் கட்சிகளில் குறைவான வர்களே இதுபோல் களத்தில் பணியாற்றி வந்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் கல்வியின் மூலம், அதி காரத்தின் மூலம், செல்வத்தின் மூலம் வந்தவர்கள். சாமானிய மக்களில் ஒரு வராக இருந்து அவர்களுக்காகப் பணி செய்து, அதற்கான எந்த அங்கீகாரத் தையும் கேட்காமல் வாழ்ந்து கொண்டி ருக்கிற அல்லது மறைந்த அந்த தோழர் களுடைய வாழ்க்கை இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம் என்றார்.இதுபோன்ற பதிவுகள் வரும் தலைமுறைக்கு அவர்களை அடை யாளம் காட்டுவது மட்டுமல்லாமல் உத்வேகமூட்டக் கூடியதாக இருக்கும் என்றும்  அவர் குறிப்பிட்டார். 

வரலாற்று நூல்கள் எதுவும் நமக்காக எழுதப்பட்டது அல்ல; ஆள்ப வர்களுக்காக எழுதப்படுகிறது. அவர்களுக்குச் சாதகமாக வரலாறு எழு தப்படுகிறது. அவர்கள் வென்ற கதை எழுதப்படுகிறது. அதில் தோற்றவர்களுக்கு, பலியான வர்களுக்கு வரலாறு கிடையாது. சாமா னியனுக்கு ஒருபோதும் வரலாறு கிடையாது. ஏழை எளிய மக்களுக்கு வர லாறு மறுக்கப்படுகிறது. அவர்களுக்கு கல்லறையில் கூட பெயர் கிடையாது என காரல் மார்க்ஸ் கூறுகிறார். நம் பண்பாட்டின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும். தற்போது பண்பாடு என்பது ஒரு தொழிற்சாலை போல் இயங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து பண் பாட்டு விஷயங்களும், ரசனை களும், நுகர்வும், யாரோ சிலரால் யாருக்காகவோ தீர்மானிக்கப் படுகிறது. நம்முடைய பன்மைத்து வத்தை, தனித்துவத்தை, மண் சார்ந்த  பழக்க வழக்கங்களை அழிக்கும் பணிகளை பண்பாட்டு தொழிற் சாலைகள் மேற்கொள்கின்றன. அந்த பண்பாட்டுத் தொழிற்சாலையின் பிடி யிலிருந்து நாம் விடுபட வேண்டும். அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் எஸ்.ராம கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள், கட்சி யின் வடசென்னை மாவட்டச் செய லாளர் எல்.சுந்தர்ராஜன் ஆகி யோரும் பேசினர். இறுதியில் நூலா சிரியர் ஜி.ராமகிருஷ்ணன் ஏற்புரை யாற்றினார். இதில் மாநிலக் குழு உறுப்பி னர்கள் ஆர்.பத்ரி, எம்.ராமகிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக க.நாக ராஜன் வரவேற்றார். பாலாஜி நன்றி கூறினார்.