tamilnadu

img

திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி மிஸ் திருநங்கையாக தூத்துக்குடி சக்தி தேர்வு

திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி மிஸ் திருநங்கையாக தூத்துக்குடி சக்தி தேர்வு

 கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம்  கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்ட வர் கோவில் சித்திரை திருவிழா நடை பெற்று வருகிறது. இதில், ஆயிரக்கணக் கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும்  கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் திரு நங்கைகளுக்கான அழகிப் போட்டிகள் நடந்தன. தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலை யம் அருகில் உள்ள நகராட்சி திடலில் திரு நங்கைகளுக்கான அழகிப் போட்டி நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னிஜி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் க.பொன்முடி முன்னிலை வகித்தார். தென்னிந்திய நடிகர்  சங்க பொதுச் செயலாளர் விஷால் கலந்து கொண்டு உரையாற்றினர். இதைத் தொடர்ந்து மிஸ் திருநங்கை-2025 அழகிப் போட்டிக்கான முதல் சுற்று நடந்தது. இதில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதி களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கை கள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண உடைகளில் வந்தனர். இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கை கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இறுதிச் சுற்றில் தூத்துக்குடியைச் சேர்ந்த  சக்தி ‘மிஸ் திருநங்கையாக’ தேர்வு செய்யப் பட்டார். தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த ஜோதா 2 ஆவது இடத்தையும், விபாஷா 3 ஆவது இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு முதல் பரிசாக ரூ.20 ஆயி ரம், 2 ஆம் பரிசாக ரூ.15 ஆயிரம், 3 ஆம் பரிசாக  ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. சிறந்த திரு நங்கைகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் சக திருநங்கைகள் வாழ்த்து தெரிவித்தனர்.