tamilnadu

img

தேனி மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா அளிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் சிறப்புப் பேரவை மாவட்டச் செயலாளர்  ஏ.வி. அண்ணாமலை தலைமையில் ஞாயிறன்று தேனியில் நடைபெற்றது. இதில் தீக்கதிர் சந்தாத் தொகை ரூபாய் 2,93,300 ஐ மதுரைப் பதிப்பு பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகனிடம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன் வழங்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர்  கே.பாலபாரதி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தீக்கதிர் சந்தா சேர்ப்பு நடைபெற்று வருகிறது.